districts

img

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டம்

திருவாரூர், ஜன.9-  திருவாரூர் நகராட்சியுடன் பெருந்த ரக்குடி, கீழகாவாதுக்குடி, தண்டலை, அம்மையப்பன், இலவங்கார்குடி உள்ளிட்ட சில ஊராட்சிகளும், சில ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளும் இணைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரடாச்சேரி ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியை திருவாரூர் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருங்குடி ஊராட்சி அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. இதில், பெருங்குடி, கீழப்படுகை, தென்கரை வேலங்குடி ஆகிய கிராமங்க ளைச் சேர்ந்த பொது மக்கள் பங்கேற்றனர். விவசாயம் சார்ந்த பகுதியான பெருங்குடி ஊராட்சியை நகராட்சி உடன் இணைப்பதல் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த கூலித் தொழிலையும் நம்பி இருக்கும் மக்கள் பெருமளவு பாதிக்கப்படுவர், 100 நாள் வேலைத் திட்டம், வீடு இல்லாத ஏழைகளுக்கு அரசின் இலவச வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும், சலுகைகளும் பாதிக்கப்படும் என்பதால், திருவாரூர் நகராட்சியுடன் பெருங்குடி ஊராட்சியை இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.  போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் பங்கேற்று, கோரிக்கையை விளக்கிப் பேசினார்.