districts

img

பூதலூரில் தனி கருவூலம் அமைக்க வேண்டும் ஓய்வூதியர் சங்க பேரவை கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.9-  

      தமிழ்நாடு அரசு அனைத்  துத் துறை ஓய்வூதியர் சங் கத்தின் ஏழாவது மாவட்ட பேரவை தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ம.நாதன் கொடியேற்றி வைத்தார்.

     பேரவைக்கு மாவட்டத்  தலைவர் இர.கலியமூர்த்தி தலைமை வகித்தார். தஞ்சா வூர் வட்டச் செயலாளர் எம். இளஞ்செழியன் வரவேற் றார். ஒருங்கிணைப்பு குழு  அமைப்பாளர் என்.குருசாமி  பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செய லாளர் ஆர்.தமிழ்மணி வேலை  அறிக்கையையும், மாவட் டப் பொருளாளர் எஸ்.கோவிந்தராசு வரவு-செலவு அறிக்கையையும் வாசித்த னர். மாநிலச் செயலாளர் ம. நாதன் நிறைவுரையாற்றி னார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜகோபா லன் நன்றி கூறினார்.

    கூட்டத்தில், கருவூ லத்தில் குடும்ப பென்சனை காலதாமதமின்றி வழங்க வேண்டும். அதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்து வரிசைப்படி கரு வூல அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். திருவிடை மருதூர், திருவையாறு சார்நிலை கருவூலத்தை தலைமை இடத்திற்கு கொண்டு வர வேண்டும். பூதலூரில் தனி கருவூலம் அமைக்க வேண்டும். சுவாமி மலை புறவழிச் சாலையை நேர்வழிப் பாதையாக அமைத்துத் தர வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்ட  குறைபாடுகளை களைந்து, மருத்துவ செலவுகளை முழு மையாக வழங்கிட வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.