கறம்பக்குடி, டிச.25 - அறிவுச் சமூகத்தை உருவாக்கும் பணி யில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தொ டர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார் கந்தர்வக் கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை. தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய மாநாடு அந்தோணிசாமி தலைமையில் திங்கள் கிழமை நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்து மாநில பொதுக்குழு உறுப்பி னர் அ.மணவாளன் பேசினார். மாவட்ட குழந்தைகள் நலக்குழுத் தலைவர் கே.சதா சிவம் மந்திரமா? தந்திரமா? நிகழ்வுகளை செய்து காண்பித்தார். வேலை அறிக்கையை வட்டாரச் செயலா ளர் சாமியப்பன் முன்வைத்தார். தலைவ ராக க.சற்பிரசாதம், செயலாளராக பி.வீரபா லன், பொருளாளராக வீ.முத்து உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் பங்கேற்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத் துரை பேசுகையில், “அறிவியல் இயக்கம் இதுவரை செய்த மக்கள் பணிகள் ஏராளம். அறிவியலுக்கு புறம்பான கருத்துகள் ஒன்றிய அரசாங்கத்தின் மூலமாகவே பரப்பப் படுகின்றன. இத்தகைய சூழலில் இனி வரும் காலத்தில் அறிவியல் பூர்வமான பணி களையும், மக்களிடத்தில் அறிவியல் மனப் பான்மையையும் முழுமையாக முன்னெடுத் துச் செல்ல வேண்டும்” என்றார். அறிவியல் இயக்க முன்னாள் மாநிலச் செயலாளர் ஆர்.விவேகானந்தன், மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், பொருளாளர் டி.விமலா, வட்டாட்சியர் சுகுமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேசினர். தமிழக அரசு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கல்வித் துறையில் தேசிய கல்விக் கொள்கையின் சாராம்சங்கள் இடம்பெறாத வகையில் தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். போலி அறிவியலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக் கோட்டையில் மாணவர்கள் தினசரி கண்டு களிக்கும் விதமாக அறிவியல் காட்சிக் கூடம் மற்றும் கண்காட்சி அரங்கம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக பிச்சைமுத்து வரவேற்க, திரு முருகன் நன்றி கூறினார்.