districts

img

முத்துக்குடா சுற்றுலா தலத்தில் அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும்

அறந்தாங்கி, டிச.30 - முத்துக்குடா சுற்றுலா தலத்தில் டெலஸ்கோப்புடன் கூடிய அறிவியல் பூங்கா அமைக்க வேண்டுமென வலியு றுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவில் ஒன்றிய மாநாடு ஆவு டையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட இணைச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித் தார். வானவில் மன்ற கருத்தாளர் காளீஸ்வரி வரவேற்றார். சிறப்பு அழைப் பாளர்களாக தமிழ்நாடு அறிவில் இயக்க மாநில பொதுக்குழு உறுப்பி னர் அ.மணவாளன், அறிவியல் மனப் பான்மை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினர்.  மாவட்டத் தலைவர் வீரமுத்து, மாவட்ட இணைச் செயலாளர் முனை வர் பேராசிரியர் ஆர். பிச்சமூர்த்தி, கவி ஞர் சாமி கிரீஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவானந்தம், மகளிர் திட்ட  ஒருங்கிணைப்பாளர் சத்யா, ஆசிரியர்  கே.எல்.ராஜேந்திரன், கே.சி.செந்தில் குமார் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் ஆரோக்கியராஜ் வாழ்த்துரை ஆற்றி னர். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டனர். தலைவராக பாலமுரு கன், செயலாளராக அருள்சுந்தரம், பொருளாளராக காளீஸ்வரி, துணைத் தலைவர்களாக பாக்கியராஜ், கண்ண தாசன், சத்யா, கலைச்செல்வி, ராமேஸ் வரி உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். மாவட்டச் செயலாளர் எம்.முத்துக்குமார் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி பேசினார். இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு கல்வி தகுதிக்கேற்ப அனைத்து அரசுத்  துறை அலுவலகங்களிலும், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண் டும். முத்துக்குடா சுற்றுலா தலத்தில் டெலஸ்கோப் உடன் கூடிய அறிவியல் பூங்கா அமைக்க வேண்டும். ஒக்கூர் முதல் கரூர் வழி திருப்புனவாசல் வரை உள்ள சாலையை உடனடியாக அகலப்படுத்த வேண்டும். அமர டக்கியில் தேசிய வங்கியின் புதிய  கிளையை அமைத்து தர வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  மாநாட்டில் ஆசிரியர்கள், மகளிர்  திட்ட பொறுப்பாளர்கள், இல்லம் தேடி  தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.  சிறப்பாக செயல்பட்ட இல்லம் தேடி  கல்வி தன்னார்வலர், கலைஞர் மகளிர்  உரிமைத் திட்டத்தில் சிறப்பாக பணி புரிந்த பயிற்சியாளர் ஹேமலதாவை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. வான வில் மன்ற கருத்தாளர் ரஷ்யா நன்றி கூறி னார்.