தூத்துக்குடி, ஜூன் 27
தூத்துக்குடியை அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரை கிரா மத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் அசோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன்பிடித்த போது அரிய வகை மயில் கோலா மீன் சிக்கியது. இந்த மீனுக்கு மயிலை போன்று பெரிய தோகை இருப்பதால் மயில் மீன் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 7 அடி நீளமும் 30கிலோ எடையும் கொண்ட இந்த மயில் மீன் 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.