மயிலாடுதுறை, மார்ச் 3- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் ஆகிய சங்கங்களின் சார்பில் ஏப்ரல் 5 அன்று தில்லியில் நடைபெற உள்ள லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி, போராட்டத்தின் நோக்கங்களை விளக்கி பிரச்சாரப் பயணம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், ஆக்கூர், ஆக்கூர் முக்கூட்டு, திருக்கடையூர், பொறையார், காட்டுச்சேரி, ஆயப்பாடி, திருக்களாச்சேரி, பூதனூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், கொத்தங்குடி, அரசூர், பெரம்பூர், மங்கநல்லூர், கோமல், தேரிழந்தூர் வழியாக குத்தாலத்தில் பிரச்சாரம் நிறைவடைந்தது. பிரச்சாரத்தில், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன், மாவட்ட துணைத்தலைவர் வைரவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் காபிரியேல், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், மாவட்ட துணைச்செய லாளர்கள் பாஸ்கரன், வீ.எம்.சரவணன், எம்.மணி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், செயலாளர் ப.மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டையில் துவங்கிய பேரணி முத்தரசநல்லூர், முருங்க பட்டி, அல்லூர், பளுர் உட்பட பல கிராமங்கள் வழியாக ஜீயர்புரத்தில் நிறைவு பெற்றது. பிரச்சாரத்திற்கு கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.