புதுக்கோட்டை, ஜூன் 26 -
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்தி ரத்தினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் சார்பில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், தானி யங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் நிறு வப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில் 300 மஞ்சப்பை வைக்கப்பட்டுள்ளது. ஒரு மஞ்சப்பையின் விலை ரூ.10. இதில் ஒரு ரூ.10 நாணயம் அல்லது இரண்டு ரூ.5 நாணயம் என எவ்விதத்தில் செலுத்தினாலும் மஞ்சப்பை வரும். நாணயம் இல்லாவிட்டால், பணத்தாள் பயன்படுத்தலாம். இதில் ரூ.10 பணத்தாள் செலுத்தினால் ஒரு மஞ்சப்பை வரும். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு மஞ்சப்பை பெற்று பயனடையலாம் என்றார்.