districts

கடையில் பணம் திருடியவர் கைது

தேனி, ஜூன் 28-

     தேனி மாவட்டம், கோம்பை மணியக்காரர் தெருவைச்  சேர்ந்தவர் முனியப்பன் மகன் ஈஸ்வரன் (40). இவர் போடி  அரசு பொறியியல் கல்லூரி அருகே வாகன பழுது நீக்கும்  கடை வைத்து நடத்தி வருகிறார். மனைவியுடன் கருத்து  வேறுபாடு காரணமாக ஈஸ்வரன் தனது கடையிலேயே தங்கியுள்ளார். இந்த நிலையில் இவர் ரூ.52 ஆயிரத்தை  கடையிலிருந்த மேசை இழுப்பறையில் வைத்திருந்துள்ளார்.

     இந்த பணத்தை செவ்வாய்க்கிழமை பார்த்தபோது காணவில்லை. இவர் பணம் வைத்திருந்த விபரம் அருகே  இரு சக்கர வாகனங்களுக்கு வண்ணம் பூசும் தொழிலாளி யான போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த முருகன் மகன்  கண்ணன் (24) என்பவருக்கு தெரியும். பணம் காணாமல்  போனதிலிருந்து கண்ணனை காணவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஈஸ்வரன் போடி தாலுகா காவல் நிலை யத்தில் புகார் செய்தார்.

   அதன் பேரில் கண்ணனை பிடித்து விசாரித்த  காவல்துறையினர் ரூ.52 ஆயிரத்தை திருடியது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கண்ணனைகைது செய்து சிறையில் அடைத்தனர்.