திருவாரூர், டிச.31 - பள்ளிச் சீருடை தைக்கும் கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தையல் கலை தொழிலாளர்கள் சங்கத் தின் திருவாரூர் மாவட்ட 16 ஆவது பேரவை சனிக்கிழமை திருவாரூரில் நடைபெற்றது.
பேரவைக்கு அமைப்பின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.தமயந்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். பேரவையை துவக்கி வைத்து பேசினார். அமைப்பின் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் சிறப்புரையாற்றி னார்.
முன்னதாக சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் டி.வீரபாண்டியன், கே.பி.ஜோதி பாசு உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் உயர்த்தி வழங்க வேண்டிய 5 சதவீத கூலியை உயர்த்தி வழங்கும் அரசா ணையை அமல்படுத்த வேண்டும்.
அரசு நடத்தும் இலவச பள்ளிச் சீருடை தைக்கும், கூட்டுறவு தையல் உறுப்பினர்களுக்கு குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டும். இலவச பள்ளி சீருடை தைக்கும் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு கூலியை பாக்கி இல்லாமல் வழங்க வேண்டும்.
தையல் தொழிலாளர்களுக்கும் இஎஸ்ஐ, பி.எப் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 13 மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப் பட்டு, இதில் தலைவராக ஆர்.தமயந்தி, செயலாளராக ஆர்.மாலதி, பொருளாள ராக ஆர்.கலா ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். பேரவையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தையல் கலைஞர்கள் கலந்து கொண்ட னர்.