districts

img

மாணவிகளுக்கு பெண் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும்

திருவாரூர், பிப்.27 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் அமைந்துள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாண வர் சங்கத்தின் 3 ஆவது  கிளை மாநாடு நடைபெற் றது. மாநாட்டிற்கு கிளைத் தலைவர் பி.சிவசக்தி தலைமை வகித்தார். மாநாட்டு  கொடியை கிளைச் செய லாளர் இரா.ரஞ்சித்குமார் ஏற்றினார். முன்னதாக கல்லூரியில் இருந்து துவங் கிய மாணவர்கள் பேர ணியை, மாவட்ட துணைத் தலைவர் பா.சுகதேவ் கொடி யசைத்து துவக்கி வைத் தார். மாவட்டத் தலைவர் ப. சுர்ஜித் துவக்க உரையாற் றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு சிறப்பு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த் புதிய நிர்வாகிகளை அறி வித்தார். 23 பேர் கொண்ட புதிய குழுவிற்கு தலைவராக சிவனேஷ், செயலாளராக க. கலைச்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். குடவாசல் எம்.ஜி.ஆர். அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நிரந்தரமான கட்டிடத்தை, குடவாசல் பகுதியிலேயே தேர்வு செய்து  கட்டிட பணியை துவங்க  வேண்டும். கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம் படுத்தி, தற்காலிகமாக கல்லூரி இயங்கும் இடத் தில் கூடுதல் வகுப்பறை களை உடனடியாக அமைத் துத் தர வேண்டும். மாணவி களுக்கு, பெண் உடற்கல்வி பேராசிரியரை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.