தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூரை அடுத்துள்ள உடன்குடி கருப்பட்டிக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை அவ்வூர் மக்கள் கொண்டாடி வரு கிறார்கள். உடன்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள 7 கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் பனை விவசாயத்தை நம்பியே இன்றைக்கும் உள்ளன. வாழ்கின்றன. புவியியல் சார்ந்த குறியீடு (ஜிஐ) என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடத்தை ஒத்தி ருக்கும் சில தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாக பதிவுசெய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் பிரபலமான தயாரிப்பு பெயரைப் பயன் படுத்த அனுமதியில்லை என்பதை ஜிஐ குறிச்சொல் உறுதி செய்கிறது. இந்தப் பகுதியில் பனை வெல்லம் தயாரிப் பில் எந்த இராசயன உத்திகளையும் கடைப்பிடிக் காததும் புவிசார் குறியீடு கிடைத்ததற்கான கார ணங்களில் ஒன்று.
சிவப்பு மண்ணே சிறப்பு
புவிசார் குறியீடு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த தூத்துக்குடியில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர் பூவலிங்கத்தின் மரு மகன் வே.குணசீலன் ஞாயி றன்று தங்களது தொழில் அனுபவங்களை தீக்கதிருடன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: உடன்குடியில் தயா ராகும் ‘கருப்பட்டி’-க்கு சிறப்பே காரத் தன்மை யுடன் கூறிய சிவப்பு மண்ணே காரணம். இந்த மண்ணில் நிலத்தடி நீர் குறைவாக உள்ளது. வறண்ட காலநிலை காரணமாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் குறைவாக உள்ளது, இது அதிக சுக்ரோஸ் உள்ளடக்கத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் சுவை சேர்க்கிறது. இப்பகுதியின் வறண்ட காலநிலை கருப்பட்டியை நீண்ட காலம் கெடாமல் வைத்திருக்கும். இந்தப் பகுதியில் பனை வெல்லம் தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் எந்த இரசாயன முறை களையும் பின்பற்றுவதில்லை. டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் பாஸ்போரிக் அமிலம் பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் உடன்குடி பனங்கருப்பட்டியில் இரசாய னங்கள் பயன்படுத்தப்படவில்லை. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் உடன்குடி வெல்லம் ஏற்றுமதி செய்யப்படு கிறது. தவிர தமிழகம் முழுவதும் உடன்குடி கருப்பட்டி செல்கிறது. நீரழிவு உள்ள வர்கள் இதை சாப்பிடலாம். கடந்தத இரண்டு தினங்களுக்கு முன்பு கூட நான் லண்டனுக்கு ஐந்து கிலோ கருப்பட்டி அனுப்பி வைத்தேன். ஒரு கிலோ ரூ.380. வெளிநாடுகளின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு ஏற்றாற்போல் மாவாக்கியும் அனுப்புகிறோம். சாறு (பதநீர்) தண்டில் கட்டப்பட்ட சிறிய மண் பானைகளில் சேகரிக்கப்படுகிறது. இது சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட பதநீர் பின்னர் பெரிய பாத்திரங்களில் கொதிக்க வைக்கப்படுகிறது. கோடை காலத்தில் திட நிலையிலும், மழைக் காலத்தில் அரை திட நிலையிலும் இருக்கும். பலர் அதை கொள்கலன்களில் சேமித்து பல மாதங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆமணக்கு விதைகளை லேசாக கருப்பட்டியின் மீது தெளிப்போம். இது நுரை பொங்கி வருவதைக் கட்டுப் படுத்தும். இதன் வெப்பநிலை 105 முதல் 107 டிகிரி வரை அடையும் போது, அது பக்குவநிலைக்கு வரும். நிறம் பொன் னிறமாக மாறும். பின்னர் அவை தேங்காய் சிரட்டைகளில் (அரைக்கோள வடி வத்தைப் பெற) ஊற்றப்படுகிறது. 15 நிமி டங்களுக்குள் அது கெட்டியாகும். இதை நாம் ‘கருப்புகட்டி’ (கருப்பட்டி) என்றழைக்கிறோம். பனைமரத்தில் ஏறுவதற்கு தொழி லாளர்கள் கிடைப்பது தான் கஷ்டமாக உள்ளது. அவர்களுக்கு முன்பணம் தர வேண்டும். தொழிலாளி ஒருவர் இரண்டு தகரம் (டின்கள்) பதநீர் இறக்கினால் ஒரு தகரம் தொழிலாளிக்கு மற்றொரு தகரம் “வெலைக்கு” தரவேண்டும். “வெலை” என்ற சொல்லாடல் பனைமரம் வைத்துள்ளவர் களைக் குறிக்கும். ஒரு தகரத்தில் 22 லிட்டர் முதல் 25 லிட்டர் பதநீர் சேகரிக்கப் படும்”. இவ்வாறு அவர் கூறினார்.
அழியும் பனை மரங்கள்
மேலும் அவர் கூறுகையில், “தமிழ கத்தில் காதி கிராப்ட், பானை கூட்டுறவு சங்கங்கள் மூலமும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழியும் தரு வாயில் உள்ளன. அவற்றைப் பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். இந்தத் தருணத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்”.
- ச.நல்லேந்திரன்