districts

img

ஊராட்சிக்குட்பட்ட மூலக்காடு கிராமத்திற்குச் சுடுகாடு அமைத்துத்தர வேண்டும்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் தாலுகா வண்ணாடகோம்பை ஊராட்சிக்குட்பட்ட மூலக்காடு கிராமத்திற்குச் சுடுகாடு அமைத்துத்தர வேண்டும். தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுமென வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கம் சாரபில் துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் கணபதி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலப் பொருளாளர் பொன்னுசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் ஆனந்தன்,சங்கிலிதுரை, முத்துசாமி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.