districts

img

கேஸ் விலை உயர்வு: ஒப்பாரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், மார்ச் 4- சமையல் எரிவாயு விலை யை உயர்த்தி ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும் வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை பாடைகட்டி தோற்கடித்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு சனிக்கிழமையன்று கேஸ்சிலிண்டரை பாடை கட்டி வைத்து ஒப்பாரி வைக்கும் போராட்டம் நடை பெற்றது.  போராட்டத்திற்கு கட்சி யின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட் டச் செயற்குழு உறுப்பினர் கள் எஸ்.அகஸ்டின், அ. கலையரசி, ரெங்கநாதன், ஆர்.கோகுலகிருஷ்ணன், நகரச் செயலாளர் சிவா னந்தம், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே. எம்.சக்திவேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சின்ன பொன்னு உள்ளிட்டோர் கல ந்து கொண்டனர். முன்ன தாக ஆட்டோ நிலையத்தி லிருந்து ஊர்வலமாக புதிய பேருந்து நிலையம் வரை பாடையுடன் சென்றனர்.