பாபநாசம் அணை நீர்மட்டம் 16.45 அடி
தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமா?
திருநெல்வேலி, ஏப்.16- தென்தமிழகத்தின் குடி நீர் தேவையை பூர்த்தி செய் வதில் பெரும் பங்கு வகிப்பது தாமிரபரணி நதியாகும். தன் பொருநை என்று அழைக்கப் படும் இந்த நதியானது பொதிகை மலையில் உற் பத்தியாகி சுமார் 128 கி.மீ பய ணித்து தூத்துக்குடி புன்னக் காயலில் கடலில் கலக்கிறது. இந்த நதியின் மூலமாக நெல்லை, தென்காசி, தூத் துக்குடி மாவட்டங்களில் விவசாய பணிகள் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தியாகி றது. இதன் குறுக்கே மேற் குத் தொடர்ச்சி மலையில் பாபநாசத்தில் அமைக்கப் பட்டுள்ள அணைக்கட்டு தென்தமிழகத்தின் மிகப்பெ ரிய அணைகளில் ஒன்று. 143 அடி உயரத்துடன் 5500 மில்லியன் கனஅடி நீர் கொள்ளளவு கொண்ட இந்த அணைக்கட்டு 1943-ல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த அணை மூலம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்க ளில் சுமார் 86 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறு கின்றன. மேலும் தாமிர பரணி நதியில் பல்வேறு இடங்களில் உறைகிணறு கள் அமைத்து அதன்மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்க ளுக்கு குடிநீர் வினியோக மும் செய்யப்பட்டு வருகி றது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த் ததால் அணையின் நீர்மட்டம் கடுமையாக குறைந்து வரு கிறது. தற்போதைய நில வரப்படி பாபநாசம் அணை யில் 16.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அணையின் நீர்மட்டம் மிகக் குறைந்த அளவாக 13.65 அடி யாக ஆனது. அதன் பின்னர் 2019-ம் ஆண்டு மே மாதத்தில் நீர்மட்டம் 10 அடிக்கும் கீழ் குறைந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு போதிய அளவு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யவில்லை. மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழையின்றி அணை களுக்கு நீர்வரத்து குறைந் தது. இதற்கிடையே அணை யில் இருந்து விவசாயம் மற் றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந் தது. தற்போது மாவட்டத்தின் பல பகுதிகளில் கோடை மழையும் பொய்த்த நிலை யில் அணைகளுக்கு நீர் வரத்து முற்றிலும் நின்று விடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மழை பெய்யும் வரை அணையில் நீர் வரத்துக்கு வழியில்லாத தால் அணையின் நீர் மட்டம் உயர வழியில்லை. ஏற்கனவே கடந்த ஜன வரி மாதம் முதல் இதுவரை இயல்பான மழை அளவை விட பாதி அளவிற்கும் கீழா கவே மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் ஏப்ரல் 16 வரையில் நெல்லை மாவட் டம் சராசரியாக வெறும் 30 மில்லிமீட்டர் அளவிலான மழையையே பெற்றுள்ளது. இது இயல்பை விட 58 சத வீதம் அளவுக்கு குறைவுதான். அணையின் நீர்மட்டமும் ஒற்றை இலக்கத்தை நோக்கி நகர்ந்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற் படும் நிலை உருவாகும் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போக்சோவில் ஒருவர் கைது
அரியலூர், ஏப்.16- அரியலூர் மாவட்டம் மலத்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி(48). இவர் 17 வயது சிறுமியை கடந்த டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இத னால், சிறுமி கர்ப்பமடைந்தது குறித்து சிறுமியின் பெற்றோ ருக்கு அண்மையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமி யின் பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், முத்துசாமியை போக்சோ சட்டத் தின் கீழ் கைது செய்தனர்.
ஒன்றிய அரசுப் பணி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
அரியலூர், ஏப்.16 - ஒன்றிய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலானத் தேர்வு - 2023 தொடர்பான அறி விப்பினை வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் பி மற்றும் குரூப் சி நிலையில், 7,500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை அறி வித்துள்ளது. இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்ப தாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்க ளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப் பிக்கும் முறை போன்ற விவரங்கள் https://ssc.nic.in/SSCFileServer/PortaliManagement/UploadedFiles/noticeCG என்ற இணையதள முகவரியில் உள்ளன. இப்பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணி யாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர் வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 03. ஆன்-லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 04. கணினி அடிப்படை யிலான தேர்வு, ஜூலை 2023-ல் ஆந்திரப்பிரதேசம் - 10, புதுச் சேரி - 01, தமிழ்நாடு - 07, தெலுங்கானா - 03 என மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங் களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக் கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப் படவுள்ளன. இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக் குறிப்புகள் தமிழ்நாடு மெய்நிகர் அரசின் கற்றல் வேலை வாய்ப்பு இணையதளத்தில் மற்றும் பயிற்சித் துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப் பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
பேராவூரணி, ஏப்.16 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எஸ்.என்.வி திருமண மண்டபத்தில், பேரை துளிர் அறக்கட்டளை சார்பில், பிளஸ் 2-க்கு பிறகு என்ன படிக்கலாம் என்ற இலவச கல்வி விழிப்பு ணர்வு வழிகாட்டி நிகழ்ச்சி “மாற்றி யோசி” எனும் தலைப் பில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர் தலைமை வகித்தார். ஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங் கிணைப்பாளர் சிகரம் சதீஷ்குமார் தொடக்கவுரையாற்றி னார். சென்னை பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் அ.மணிகண்டன், சென்னை லயோலா கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜஸ்டின் சோபியா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி உதவி பேராசிரியர் ஏ.விமல் ஜெரால்ட், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் ந.லெனின் ஆகியோர் கல்வி வழி காட்டி விழிப்புணர்வு உரையாற்றினர். முன்னதாக தலைவர் ஆர்.நாகேந்திர குமார் வர வேற்புரை ஆற்றினார். செயலாளர் பி.சண்முகநாதன் அறிக்கை வாசித்தார். பொருளாளர் என்.வன்மீகநாதன் நன்றி கூறினார். இதில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளை அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்
கும்பகோணம் ஏப்.16 - தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திற னாளிகளுக்காக பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம் ஏப்ரல் 18 (செவ்வாய்) அன்று கும்பகோணம் கே.எம். எஸ்.வளாகம் (பெரிய மாதா கோயில்) பேருந்து நிலையம் அருகில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை பிரிவு, மனநலம் மற்றும் கண் உள்ளிட்ட சிகிச்சைக்கான அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரி சோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர். மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்ப டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. கும்பகோணத்திற்கு உட்பட்ட இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதுவரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID)விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல் மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம். முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். தனிமனித இடை வெளியை பின்பற்ற வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை பெற அரசுப் பள்ளி மாணவர்கள் மூவர் தேர்வு
தஞ்சாவூர், ஏப்.16- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள துலுக்கவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கனிஷ்கா, மாண வர்கள் பிரேம்குமார், செல்வ நீலகண்டன் ஆகிய மூவரும், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர் களை பள்ளியின் தலைமை ஆசிரியர் கழக தலைவர் பிரகலாதன், ஆசிரியர்கள் தமிழரசன், மணிமேகலை, ரவிச்சந்திரன், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் செல்வமணி, பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர். கடந்த பிப்.25 அன்று இதற்கான தேர்வு நடை பெற்று, ஏப்.15 அன்று தேர்வு முடிவுகள் வெளியானது. வெற்றி பெற்ற மாணவர் களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம், 9, 10, 11, 12 ஆம் வகுப்பு வரை என 4 வருடங்களுக்கு ரூ. 48 ஆயி ரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராவூரணியில் தென்னை சார் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்
தென்னை விவசாயிகள் வலியுறுத்தல்
பேராவூரணி, ஏப்.16- தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி எம்.எஸ்.விழா அரங்கில், ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயி கள் சங்கம் சார்பில் உறுப்பினர்கள் சந்திப்பு மற்றும் தென்னை விவ சாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் இ.வீ.காந்தி தலைமை வகித்தார். செய லாளர் விஸ்வ.ராம்குமார் வரவேற் றார். பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் என்.அசோக்குமார், நாம் உழவர் இயக்கத் தலைவர் பிரபுராஜா, மதுரை வேளாண் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் கே.வைரவன், தென்னை உற்பத்தி யாளர் சங்க மாநில செயலாளர் அறந் தாங்கி பி.செல்லதுரை, வடகாடு மிளகு அறிமுக விவசாயி கே.பாலுச் சாமி, கீரமங்கலம் நக்கீரர் தென்னை மைய நிறுவன ச.வே.காமராசு, திருச்சி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் இல.சி.இலக்குவன் ஆகியோர் கருத்துரையாற்றினர். இணைச் செயலாளர் ஏ.முகமது சமீர் நன்றி கூறி னார். கூட்டத்தில், “பொதுமக்கள் அனைவரும் தேங்காய் எண் ணெய்யை பயன்படுத்த முன்வர வேண்டும்.
பேராவூரணி பகுதி தென் னைக்கு தமிழ்நாடு அரசு புவிசார் குறியீடு வழங்க நடவடிக்கை எடுக் கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும், புவிசார் குறியீடு பெற உரிய ஆதாரங்களை திரட்டி தரு வது எனவும் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு தேர்தல் வாக்குறு தியில் பரீட்சார்த்த அடிப்படையில் அனைத்து ரேசன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று அறிவித்ததை நடைமுறைப் படுத்த வேண்டும். சத்துணவு திட்டத் தில் தேங்காய் எண்ணெய்யை பயன் படுத்த வேண்டும். ஆவின் நிறுவனம் போன்று, தென்னை உற்பத்திக்கு பொது இடங்களில் விற்பனை நிலை யம் அமைத்து, இளநீர், நீரா, தேங்காய்ப்பால், தேங்காய் பவுடர், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட வற்றை விற்பனை செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும். உடனடி நிவாரணமாக தேங்காய் கொப்பரையை மூடி வைக்க தார்ப்பாய் வழங்க வேண்டும். தென் னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட் களை தயாரிக்கும் தொழிற்சாலை யும், விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் வேளாண் அறி வியல் பயிற்சி மையம் (கே.வி.கே) அமைக்க வேண்டும். தென்னை அதிகம் விளையும் பகுதியான பேரா வூரணி கிழக்கு கடற்கரையை ஒட்டிய பகுதியில் தென்னை சார் தொழிற் பேட்டை அமைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.