districts

img

தரங்கம்பாடி கடற்கரையில் ஒதுங்கிய படகில் புத்தர் சிலை? கடலோர காவல்படை விசாரணை

மயிலாடுதுறை, ஜன.6- மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி கடற் கரையில்  வெளிநாட்டைச் சேர்ந்த சிறிய தெப்பம் போன்ற படகு ஒன்று வியாழ னன்று மாலை கரை ஒதுங் கியது. பர்மா கைவினை கலையுடன், கொடிகள் கட்டப் பட்டிருந்த அந்த படகில்  புத்தர் போன்ற சிலையும் இருந்தது.  இதனை மீன்பிடித்துக் கொண்டிருந்த ரவி, முனி யாண்டி, அஜித் உள்ளிட் டோர் கரைக்கு இழுத்து வந்து, கடலோர காவல் துறையினருக்கு தகவல்  அளித்தனர். தகவலின்பே ரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வெளிநாடுகளில் தெப்பம் செய்து கடலில் விடும் விழா கொண்டாடும் போது, திசை  மாறி இப்பகுதிக்கு வந்ததா?  இந்த தெப்பம் எந்த நாட்டை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.