மயிலாடுதுறை, அக்.31 - மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள காலமநல்லூர் ஊராட்சி குமாரக்குடி, காலமநல்லூர், வடக் கட்டளை, சங்கேந்தி ஆகிய பகுதிகளில் நடப்பு சம்பா பருவத்தில் 1200 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டிருந் தது. இந்நிலையில் கடல் நீர் உட்புகுந்த தால் 800 ஏக்கர் நெல் விதைப்பு பயிர்கள் கருகி நாசமாகியுள்ளன. இப்பகுதி வழி யாக செல்லும் அம்மனாறு, சேவன் ஆறு வழியாக ஒவ்வொரு ஆண்டும் கடல்நீர் உட்புகுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் இந்தாண்டு மட்டும் இரண்டா வது முறையாக கடல் நீர் விளைநிலங் களில் புகுந்து நாசமாக்கி விட்டதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேதனை யுடன் கூறுகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதி களை சிபிஎம் மாநில செயற்குழு உறுப் பினர் கே.சாமுவேல்ராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மயிலாடு துறை மாவட்ட செயலாளர் எஸ்.துரை ராஜ், மாவட்டத் தலைவர் டி.சிம்சன், விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் வீ.எம்.சரவணன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு விவசாயிகளிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். ஏற்கனவே விதைப்பு செய்யப் பட்டிருந்தவை சிறிதளவு முளைத் திருந்த நிலையில் கடந்த மாதம் கடல் நீர் உட்புகுந்ததால் கருகி போனது. தற்போது மீண்டும் விதைப்பு செய்த தும் உப்புநீர் புகுந்து கருகியிருக் கிறது. ஒவ்வொரு முறையும் கடல் கொந்தளிக்கும் போதெல்லாம் அம்ம னாறு, சேவன் ஆறுகள் வழியாக உப்பு நீர் புகுந்து விவசாயத்தை பாழாக்கி வரு கிறது. எனவே கடல் நீர் புகாதவாறு தடுப் பணை அமைக்க வேண்டும். பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.