districts

img

7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா விழிப்புணர்வு பிரசுரம்: ஆட்சியர் வெளியிட்டார்

புதுக்கோட்டை, ஜூலை 2 - மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் இணைந்து நடத்தும் 7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோ சனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னர் புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தினை வெளி யிட்டு ஆட்சியர் பேசுகையில், “7 ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவானது 27.7.2024 முதல் 5.8.2024 வரை 10 நாட்கள் புதுக் கோட்டை மா.மன்னர் கல்லூரி விளை யாட்டுத் திடலில் நடைபெற உள்ளது.  இதில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரிகள்  கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப் பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, காவல் துறை,  தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை,  போக்குவரத்துத் துறை, பொது நூலகத் துறை, மருத்துவத்துறை, தமிழ்நாடு மாநில  ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) உள்ளிட்ட துறைகள் கலந்து  கொள்கின்றன. எனவே இந்த புத்தகத் திரு விழாவினை சிறப்புடன் நடத்திட தொடர்பு டைய அலுவலர்கள் அனைவரும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும்” என்றார்.

;