நாகர்கோவில், ஜூன் 7-
கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் கன்னிப் பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பேச்சிப்பாறை அணை கடந்த ஜுன் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது பேச்சிப்பாறை அணையில் இருந்து செவ்வாயன்று குறைவான அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் புதனன்று அணையில் இருந்து வெளியேற்றப் படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை யில் இருந்து 223 கன அடி தண்ணீர் திறந்து விடப்படு கிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து 575 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் 798 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தோவாளை சானல், அனந்தனார் சானல்க ளில் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. சானல்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து விவசாயிகள் சாகுபடிப் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடைமடை பகுதிவரை விவசாயத்துக்கு போதுமான தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில் அனைத்து கால்வாய்க ளையும் தூர்வாரி கடைமடை வரை தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க கேட்டு செயற் பொறியாளர் (நீர்வளம்) அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் குமரி மாவட்டக்குழு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.