districts

பேருந்து கவிழ்ந்து 7 பேர் காயம்

அறந்தாங்கி, ஜூன் 11-

     புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியிலிருந்து   ஆவுடையார் கோவிலுக்கு அரசுப் பேருந்து  20 பயணிகளுடன் புறப்பட்டது . பேருந்தை  ஓட்டுநர் செல்வம் இயக்கினார். பேருந்து விச்சூர் கண்மாய் பகுதியில்  சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில்  இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நடத்துநர் சண்முக நாதன் உட்பட ஏழு பேர் காயமடைந்தனர். பேருந்தில் பயணிகள் குறை வாக இருந்தததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மணமேல்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.