கும்பகோணம், ஜூன் 7-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகம் பாலக்கரை அருகே தமிழக அரசால் தடை செய்யப் பட்ட குட்காவை கடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து கும்பகோணம் காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது கும்பகோணம் வினை தீர்த்தான் தெருவை சேர்ந்த தட்சணா மூர்த்தி மற்றும் அவருடன் வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவர்களிடமிருந்து 620 கிலோ குட்கா மற்றும் 2 கார் 3 இருசக்கர வாகனம் மற்றும் விற்பனை செய்த பணம் ரூ.11,60,000/- ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.