districts

img

பருத்திக்குடியில் 50 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம் ஆற்றில் இறங்கிச் சென்று அடக்கம் செய்யப்படும் சடலம்

மயிலாடுதுறை,நவ.22 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றி யம் பருத்திக்குடி கிராமத் தில் பட்டியல் வகுப்பு மக்கள் பயன்படுத்தக் கூடிய சுடுகாட்டிற்கு சட லத்தை தூக்கிச் செல்ல பாதையில்லை. இதனால் ஆற்றில் இறங்கி, சட லத்தை தூக்கி செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. ஸ்ரீகண்டபுரம் அருகேயுள்ள பருத்திக்குடி ஊராட்சி, வடக்குத் தெரு வில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற் பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த மக்க ளில் யாரேனும் இறந்து விட்டால் அப்பகுதியில் உள்ள வாடி வாய்க்கால் கரையோரம் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய் வது வழக்கம். ஆனால் அந்த சுடுகாட்டிற்கு செல்லும் சாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளதோடு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையின் குறுக்கே வாடி வாய்க்கால் என்ற ஆறு செல்கிறது. இதனால், மழைக் காலங்களிலும், ஆற்றில் நீர் செல்லும் சமயங்களிலும் கடும் சிர மத்துடன் சடலத்தை எடுத்து செல்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரி விக்கின்றனர்.  இதுகுறித்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குத்தாலம் ஒன்றியக் குழு உறுப்பினர் முரளி கூறுகையில், “சுதந்திர மடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்தும் பட்டியல் வகுப்பு மக்கள் பயன் படுத்தக் கூடிய சுடுகாட்டி ற்கு செல்ல சரியான பாதையில்லை. அப்படியே பாதை இருந்தாலும்  ஏராளமான இடங்களில் பாதையின் குறுக்கே ஆறு ஓடுகிறது.  அப்படிதான் பருத்திக் குடி கிராமத்திலும் உள்ளது. இது சம்பந்தமாக வடக்குத்தெரு பட்டியல் வகுப்பு மக்கள் சார்பில் பல முறை மனுக்கள் அளித்தும் எந்தவித பலனும் இல்லை. மழைக்காலங்களில் யாரேனும் இறந்து விட்டால் மிகுந்த சிரமத்துடன்தான் சடலத்தை தூக்கி செல்கி றோம். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுடு காட்டிற்கு செல்ல வசதியாக சிறிய பாலத்தையும், சாலையையும் சீரமைத்து தர வேண்டும்” என்றார்.