நாகப்பட்டினம், ஜூன் 26-
50-க்கும் மேற்பட்ட குடும்பங் கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த வர்களை வரவேற்று செங்கொடி ஏற்றி சிறப்பிக்கும் விழா நடை பெற்றது.
நாகப்பட்டினம் வடக்கு ஒன்றி யம் பெருங்கடம்பனூர் ஊராட்சி யில் பிற கட்சிகளில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் விழா ஆர்.துரை தலைமையில் நடைபெற்றது. ஜீவா நகர், காலனி தெரு, புலியந்தோப்பு, கடைத்தெரு ஆகிய பகுதிகளில் செங்கொடி ஏற்றப்பட்டு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
செங்கொடியை ஏற்றி வைத்து, கட்சியில் இணைந்தவர்களை நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து வரவேற்றுப் பேசி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ப.சுபாஷ் சந்திரபோஸ் சால்வை அணிவித்து வாழ்த்திப் பேசி னார். நாகை வடக்கு ஒன்றிய செய லாளர் வி.வி.ராஜா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி.அருள் தாஸ், பொருளாளர் என்.எம்.பாலு, மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வி, தலைவர் விமல ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.