புதுக்கோட்டை, பிப்.8- எய்டு இந்திய நிறுவனம் சார்பில் கந்தர்வகோட்டை யை அடுத்து புனல்குளத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் 5 வீடு கள் கட்டுவதற்கான அடிக் கல்லை நாட்டி பணிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். நிகழ்வில் கவிஞர் கவி வர்மன், மாவட்டக் கவுன் சிலர் ஸ்டாலின் நாராயண சாமி, எய்டு இந்தியா நிறு வனத்தின் மாநில இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் ராஜா, மாநில நிர்வாகி சாமிநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, வானவில் மன்றக் கருத்தா ளர்கள் தெய்வீக செல்வி, வசந்தி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.