புதுக்கோட்டை, நவ.25- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் திங்கள்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உத வித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 488 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற் கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்க ளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.