மயிலாடுதுறை, நவ.3- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 42-ஆவது அமைப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சங்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி வியாழனன்று நடைபெற்றது. கனமழையிலும் ஒவ்வொரு கிராமங்களிலும் வெண்கொடியையும், அமைப்பின் பெயர் பலகை யையும் திறந்து வைத்து மக்களுக்கான போராட் டத்தில் உயிர் நீத்த வாலிபர் சங்க தியாகிகளை நினைவுகூர்ந்து முழக்கமிட்டனர். மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம்பேட்டை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வட்டச் செயலாளர் மு.குமரேசன் கலந்துக்கொண்டார். தரங்கம்பாடி ஒன்றியம் திருக்கடையூர், டி.மணல்மேடு, திரு விளையாட்டம், அபிஷேகக்கட்டளை, பூதனூர், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சி களில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தி மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் பவுல் சத்திய ராஜ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, ஒன்றியப் பொருளாளர் ரஷ்யா, ஹோசி மின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர், கீழை யூர் பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கபிலன், சபீர் அகமது, அனீஷ் ரஹ்மான் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர், சேத்தூர் மற்றும் சீர்காழி, கொள்ளிடம் ஒன்றியங்களிலும் வாலிபர் சங்க கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.