புதுக்கோட்டை, ஜூலை 16-
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தி உள்ளது.
சாலைப் பணியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 8 ஆவது மாநாடு புதுக்கோட்டையில் சனிக் கிழமை நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப. முத்துக்கருப்பன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ச.மகேந்திரன் தொடக்கவுரையாற்றினார். மாநிலச் செயலாளர் கு.பழனிச்சாமி மற்றும் தோ ழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர்.
மாநாட்டை நிறைவு செய்து ஆ.அம்சராஜ் உரையாற்றினார். முன்ன தாக மாவட்ட துணைத் தலைவர் கே. தங்கவேலு வரவேற்க, தை.ஹரி தீர்த்தம் நன்றி கூறினார்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். 7 ஆவது ஊதிய மாற்றப் பலன்களை வழங்க வேண்டும். பணிநீக்க காலத்தில் இறந்துபோன சாலைப் பணியாளர்களின் வாரிசு களுக்கு அரசுப் பணி வழங்கிட வேண்டும். ஊதியத்தில் 10 விழுக்காடு ஆபத்துப் படி மற்றும் நிரந்தரப்படி வழங்க வேண்டும். முடக்கப்பட்ட பஞ்சப்படி சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.