districts

img

பாலின உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தும்: சென்னையின் 3வது பெருந்திட்டம்

சென்னை, நவ.30-  சென்னையின் 3வது பெருந்திட்டம் பாலின உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரி வித்தனர்.  சென்னையில் முதல் பெருந்திட்டம் 1975ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. பின்னர் 13 ஆண்டுகள் கழித்து 2வது பெருந்திட்டம் 2008ம் ஆண்டு வந்தது. இந்நிலையில், சென்னையின் 3-வது பெருந்திட்டம் தயாரி ப்பதில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் இறங்கியுள்ளது. லண்டனின் முற்போக்கான நகர்ப்புற திட்டமிடல் மூலம் ஈர்க்கப்பட்டு, 3வது பெருந்திட்டத்தை உரு வாக்க உதவும் வகையில், 1,189 சதுர கிமீ பெருநகரப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சிஎம்டிஏ ஆய்வைத் தொடங்க வுள்ளது. இதில் அணுகல், இயக்கம், பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம், கால நிலை பின்னடைவு மற்றும் நிலம், வீட்டு வசதிக்கான அணுகல் ஆகிய 6 முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி ஆய்வு கள் மேற்கொள்ளப் படவுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் பாதுகாப்பான பொது இடங்கள், பாலின உணர்திறன் உள்கட்டமைப்பு, மேம்படுத் தப்பட்ட நடமாட்டம், உள்ளடக்கிய வீடுகள் மற்றும் காலநிலை-எதிர்ப்பு உள்கட்ட மைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் பாலினத்தை உள்ளடக்கிய 3வது பெருந்திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இதுகுறித்து பாலின செயற்பாட்டா ளர்கள் கூறியதாவது: வீடு மற்றும் பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக, நகர்ப்புற திட்டமிடலில் அனைத்து பாலி னத்தை உள்ளடக்கிய அத்தியாவசிய உத்தி களை வகுக்க வேண்டிய அவசரத் தேவை  உள்ளது. பேருந்து நிறுத்தம் கட்டும்போது கூட, பாலின பாதுகாப்பு கருத்தில் கொள்ள வேண்டும். பாலின உள்ளடக்கத்தை உறுதி செய்வதில் வீட்டுவசதி ஒரு முக்கிய காரணி யாக இருக்கிறது. குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த பெண்கள் புறநகர் பகுதிகளுக்கு செல்ல நிர்ப்பந்திக்கப்படு கின்றனர். இதனால், வேலைக்குச் செல்வது அதிக பணம் மற்றும் நேரத்தைச் செலவழிக் கும் செயலாக மாறி விடுகிறது. இது வேலை  வாய்ப்புகளை குறைக்கிறது. வருங்கா லத்தில் தயாரிக்கப்படும் பெருந்திட்டத்தில் இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்றனர்.