அரியலூர் ஆக.27 -
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கபடி, கோகோ போட்டிகள் நடைபெற்றன. இதில் 365 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
ஜெயங்கொண்டம் குறுவட்ட அளவி லான கபடி (ஆண்கள்), கோகோ (பெண்கள்), கையுந்து பந்து போட்டிகள் நடைபெற்றன. த.கீழவெளி தலைமை ஆசிரியர் கிருஷ்ண சாமி தலைமை வகித்தார். மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் தேகளீசன் போட்டியை துவக்கி வைத்து, இதில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
போட்டியில் அரசு மற்றும் தனியார் பள்ளி களைச் சேர்ந்த சுமார் 365 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்கள் 14, 17, 19 வயது பிரிவில் பாத்திமா பெண்கள் மேல் நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது. ஆண்களுக்கான கபடி போட்டியில் 14 வயது பிரிவில் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளி முதலிடத்தையும், 17,19 வயது பிரிவில் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதலி டத்தையும் பெற்றுள்ளன. கோகோ (பெண்கள்) 14,17 வயது பிரிவுகளில் மீன்சுருட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளி முதலிடத்தை பெற்றுள்ளது.