districts

img

30 திருநங்கைகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கல்

புதுக்கோட்டை, மே 22-

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக் குடி தாலுகா, பட்டத்திக்காடு கிராமத் தைச் சேர்ந்த 30 திருநங்கைகளுக்கு, விலையில்லா வீட்டுமனைப் பட்டாக் களை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

   மேலும் குளத்தூர் தாலுகா, வெள்ள னூர் ஊராட்சி, ரெங்கம்மாள்சத்திரம் கிராமத்தில் வசிக்கும் 95 நரிக்குறவர் சமூக மக்களுக்கு, அவர்களின் வாழ்வா தாரத்தை உயர்த்தி கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியி லிருந்து ஒரு குடும்பத்திற்கு தலா ரூ. 10,000 மதிப்பீட்டில் 2 ஆட்டுக்குட்டி களையும், தலா ரூ.5,000 வீதம் துளசி மணி பாசி செய்வதற்காக, ஒரு மாதத்திற்கு  தேவையான மூலப் பொருட்களையும், பாசி உற்பத்தி செய்து கடைகளில் விற் பனை செய்வதற்கு ஏதுவாக மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  

    மேலும் காமராஜபுரத்தைச் சேர்ந்த 51 பேருக்கு ரூ.5,000 மதிப்பீட்டில் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, வரு வாய் கோட்டாட்சியர்கள் முருகேசன் (புதுக்கோட்டை), குழந்தைசாமி (இலுப் பூர்), துணை ஆட்சியர் (பயிற்சி) ஜி.வி. ஜெயஸ்ரீ, செய்தி மக்கள் தொடர்பு அலு வலர் ரெ.மதியழகன், வட்டாட்சியர் சக்தி வேல் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.