தஞ்சாவூர், மே 15-
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா விற்கப்படு வதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் பேரில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக் கோட்டை நேரு நகர் தட்டாங்குளம் பகுதியில் சந்தேகப்ப டும் படி நின்றிருந்த பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த லட்சு மணன் (29), அதே பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் (20) ஆகிய 2 பேரை விசாரித்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது, அதில் ஒன்றரை கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் சுண்ணாம்புக்கார தெருவில் விற்பனைக் காக கஞ்சா வைத்திருந்த உதயசூரியபுரம் கழுகப்புளிக் காடு பகுதியைச் சேர்ந்த குமார் (33) என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.