சிறுமி பாலியல் வல்லுறவு: இளைஞருக்கு 25 ஆண்டு சிறை
தஞ்சாவூர், டிச.9- சிறுமியைக் காதலித்து பாலியல் வல்லுறவு செய்த இளைஞருக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் வியாழக்கிழமை 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் அருகே மாதாகோட்டையைச் சேர்ந்தவர் கார்த்தி (21). இவர் 2021 ஆம் ஆண்டில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்தார். இச்சிறுமி யைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, கார்த்தி பாலியல் வல்லுறவு செய்தார். பின்னர் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, காவல் துறையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் சிக்கிக் கொண்டனர். அப்போது, காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமியை கார்த்தி பாலியல் வல்லுறவு செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்தினர் 2021 ஆகஸ்ட் 29 அன்று வழக்குப் பதிந்து கார்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட் டது. வழக்கை நீதிபதி ஜி.சுந்தரராஜன் விசாரித்து, கார்த்திக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீர்ப்பளித் தார்.
‘மனித உரிமைகள்’ உறுதிமொழி ஏற்பு
புதுக்கோட்டை, டிச.9 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், ‘மனித உரி மைகள்’ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தலைமையில் வெள்ளிக்கிழமை அனைத் துத் துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். நிகழ்வில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யா தேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெட்ரோல் பங்குகள் அருகே பேரிகார்டு அமைக்க வலியுறுத்தல்
அறந்தாங்கி, டிச.9 - புதுக்கோட்டை மற்றும் கட்டுமாவடி பெட்ரோல் பங்குகளில் நடந்த விபத்தில் இருவர் பலியாகினர். எனவே பெட்ரோல் பங்குகள் அருகே பேரிக்கார்டு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியை அடுத்த கட்டுமாவடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜா கூறுகையில், “கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு புதுக்கோட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பிய ராசப்பன் (65) என்பவர் அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளி யாகின. இந்நிலையில் டிச.7 அன்று கட்டுமாவடியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்ப திரும்பிய ஆட்டோ மீது தண்ணீர் ஏற்றி வந்த மினி லாரி மோதிய தில் ஆசிபா பேகம் (9) என்ற சிறுமி உயிரிழந்தார். இதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்கு களில் நடந்த விபத்துகளில் படுகாயமும் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் வகையில், பெட்ரோல் பங்குகளில் பேரிகார்டு அமைக்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
டிப்பர் லாரி மோதி 2 திருநங்கைகள் பலி
திருச்சிராப்பள்ளி, டிச.9 - திருச்சி உக்கடை அரியமங்கலத்தைச் சேர்ந்த திரு நங்கைகள் தனியா (25), தமிழ் (29). இவர்கள் இருவ ரும் தங்களது இருசக்கர வாகனத்தில் திருச்சி அரியமங்க லம் பால்பண்ணை ரவுண்டானா அருகே வெள்ளியன்று அதிகாலை வந்து கொண்டிருந்தனர். அப்போது கரூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற டிப்பர் லாரியை பூதலூர் அயோத்திபட்டியைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் திரு நங்கைகள் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானா அருகே டிப்பர் லாரியை முந்தி செல்ல முற்பட்டபோது, நிலை தடுமாறி கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லாரி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தன்யா சம்பவ இடத்திலேயே பலியானார். படு காயமடைந்த மற்றொரு திருநங்கையான தமிழை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவ லறிந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் மணிமாறன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு தண்ணீர்த் தொட்டி வழங்கிய முன்னாள் மாணவர்
கும்பகோணம், டிச.9 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திரு விடைமருதூர் ஒன்றியம் ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில், ஆரியச்சேரி, கீரனூர், செம்மங்குடி, உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளி ஆசிரியர்களின் முயற்சியால், மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்தி பாராட்டுகளைப் பெற்று வரு கின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக, அப்பள்ளியில் படித்த முன்னாள் மாண வரும், புரவலருமான கருணா ஐயப்பன் மற்றும் அவரது துணைவியார் சுமதி ஐயப்பன் ரூ.12,000 மதிப்பில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டியை வழங்கினர். மேலும் அதை நிறுவுவதற்கான செல வினத் தொகையையும் ஏற்றனர். பள்ளி தலைமையாசிரியர் ந.மேகலா தண்ணீர் தொட்டியை பெற்றுக் கொண்டார்.
ஊழியர்களுக்கு வார விடுமுறையை முழுமையாக வழங்க சிஐடியு கோரிக்கை
பொன்னமராவதி, டிச.9 - புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் முகமதலி ஜின்னா, பொன்னமராவதி பேரூராட்சி செயல் அலுவலரிடம் அளித்த கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: ஒப்பந்தப்படி தற்போது வரை நடைமுறையில் உள்ள வாரம் ஒருமுறை வார விடுப்பை (ஞாயிற்றுக்கிழமை) ஊழியர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். அரசு உத்தரவுபடி அரசு ஊழியர்களுக்கு 2-வது சனிக்கிழமை விடுப்பு வழங்குவதுபோல் தூய்மை பணியாளர்களுக்கும் விடுப்பு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்கும் சம்பளம், பி.எப். கணக்கீடு விவரங்களை தொழிலாளர்களுக்கு தெரிவித்திட சம்பள பட்டியல் வழங்க வேண்டும். தீபாவளி, பொங்கல் பண்டிகை, குடியரசு தினம், கிறிஸ்மஸ், ஆயுதபூஜை, ரம்ஜான், மே தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட விடுமுறை நாட்களில், தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். சட்டத்திற்குட்பட்டு 8 மணிநேரத்திற்கு மிகாமல் வேலை வாங்க வேண்டும். மாறாக கூடுதல் பணி பார்க்க நிர்ப்பந்தம் செய்வதை கைவிட வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், ஒன்றியக் குழு உறுப்பினர் சாத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.
கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம் நடத்த ஓய்வூதியர்கள் முடிவு
திருச்சிராப்பள்ளி, டிச.9 - தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஆலோசனை கூட்டம் வெள்ளியன்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். இணைச் செயலாளர் எஸ்.முருகேசன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ்.மதிவாணன், மாவட்ட இணை செயலாளர் டி.ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர். மாநிலச் செயலாளர் எம்.வி.செந்தமிழ் செல்வன் சிறப்புரை ஆற்றி னார். தமிழக முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர், ஆசிரியர், ஓய்வூதியர், சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறை வேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும். 70 வயதை கடந்த ஓய்வூதி யர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், வரு வாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பட்டு வளர்ச்சித் துறை தற்காலிக ஊழியர்கள் மற்றும் வனத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு லட்சம் ஓய்வூதியர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துவது. டிச.12 அன்று கண்களில் கருப்பு பட்டை துணி கட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக் கப்பட்டது. மாவட்டப் பொருளாளர் துளசிராமன் நன்றி கூறி னார்.
புதிய சாலையில் அடிக்கடி விபத்து: நடவடிக்கை கோரி போராட்டம்
வேதாரண்யம், டிச.9 - நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஓஎன்ஜிசி சாலையிலிருந்து ஆயக்காரன்புலம் 4-ஆம் சேத்தி ஊராட்சி மன்றம் வரை புதிய சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையின் இருபுற மும் மண் கொட்டி தூர்க்கப்படாமல் உள்ளதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதை தவிர்க்க வேண்டுமென கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற் றது. இதில் சிபிஎம் மாவட்டக் குழு செயலாளர் பி.எஸ். பன்னீர்செல்வம், தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.அம்பி காபதி, ஒன்றியக் குழு செயலாளர் எஸ்.தங்கராசு உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை யில், 2 மாதத்திற்குள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.
பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கு உரிமையாளர், மனைவியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
மதுரை, டிச.9- பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் அதன் உரிமை யாளர், அவரது மனைவி ஆகியோரின் முன்ஜாமீன் மனுக் களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் செயல்பட்ட பிரணவ் ஜூவல்லரி நகை சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி மக்களிடம் மாதத் தவணைகளில் ரூ.100 கோடி அளவில் பணம் வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக பிரணவ் ஜூவல்லரி உரிமை யாளர் சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த மதன் செல்வராஜ், இவர் மனைவி கார்த்திகாமதன் ஆகியோர் மீது மதுரை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் பொரு ளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மதன் செல்வராஜ், கார்த்திகா மதன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதில், கொரோனா கால நெருக்கடியால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு நகை மற்றும் பணத்தை திரும்ப வழங்க முடியவில்லை. இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காண விரும்புகிறோம் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணை க்கு வந்தது. அரசு வழக்கறிஞர், ‘‘இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மதன் செல்வராஜ், மதுரை நீதி மன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். கார்த்திகா இன்னும் தலைமறைவாக உள்ளார். ரூ.100 கோடிக்கு அதிகமாக மோசடி நடைபெற்றுள்ளது. இதுவரை 1900-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ள னர். மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம்’’ என்றார். இதையடுத்து முன்ஜா மீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தர விட்டார்.
தேனியில் பிரபல பருப்பு மில் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை
தேனி, டிச.9- தேனியில் பிரபல பருப்பு மில் நிறுவனத்தில் 3-ஆம் நாளாக வெள்ளியன்றும் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். தேனியை சேர்ந்த தொழிலதிபர் சந்திரகுமார் என்பவர் தேனியை தலைமையிடமாக பருப்பு மில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட தென்னிந்திய அளவில் பருப்பு வகைகளை மொத்த விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் வருமான வரி சரியாக தாக்கல் செய்ய வில்லை என்ற புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்துக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை மதுரை கூடுதல் இயக்குநர் மைக்கேல் ஜெரால்டு தலைமையிலான 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 3-ஆம் நாளாக சோதனை மேற்கொண்டனர்.
கொடிநாளில் ஆட்டோ ஓட்டிய பணம் நன்கொடையாக ஆட்சியரிடம் வழங்கல்
நாகர்கோவில், டிச.9- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளியன்று (நவ.8) நாகர்கோவில் டி.வி.டி காலனியை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கோபிநாத் (47) என்பவர், தான் ஆட்டோ ஒட்டி சேமித்து வைத்த 1880 ரூபாயை கொடிநாள் நன்கொடையாக மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதரிடம் வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலன் துணை இயக்குநர் மேஜர் வா.ஸ்ரீ.ஜெயகுமார் (ஓய்வு), கிராமிய கலைஞர் கலைமாமணி பழனியாபிள்ளை ஆகியோர் கலந்து கொண்ட னர்.