திருவாரூர், ஜூன் 7-
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழ கத்தின் சார்பில் கணிதத் துறை, ‘‘சீனிவாச ராமானுஜன் நினைவாக கணிதத்தில் கோடைக்காலப் பள்ளி’’ என்ற பயிலரங்கை நடத்துகிறது.
இளங்கலை மாணவர்களிடையே கணிதத் திறமை யை வளர்ப்பதையும், கணிதவியலாளர் ஸ்ரீனிவாச ராமானு ஜனின் அசாதாரண பங்களிப்பை நினைவுகூரும் வகை யிலும் நோக்கமாகக் கொண்டு 21 நாள் பயிலரங்கம் நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
இதன்படி, மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.கிருஷ்ணன் கணித பாடப் பள்ளி யை திறந்து வைத்தார். கணிதவியலாளர்கள் மற்றும் துறையில் உள்ள வல்லுநர்கள் நுண்ணறிவு அமர்வுகளை வழங்குவதற்கும் ஊடகங்களில் விவாதங்களில் ஈடுபடு வதற்கும் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விவரங்கள் அறிய https://nurture1729.in என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.