பெரம்பலூர், ஜூன் 4-
பெரம்பலூர் நகராட்சி 21- ஆவது வார்டு மக்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஞாயி றன்று தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள் பெரம்பலூர் பாலக்கரை- மூன்று ரோடு திருச்சிராப்பள்ளி சாலையில், காலிக் குடங் களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யும், தாளக்குடி கிராமத்தில் இருந்து வரும் பைப் உடைந்து விட்டதாகவும், அது சரி செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், திங்கள் மாலைக்குள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் எனவும் மாற்று ஏற்பாடாக வாகனத்தின் மூலம் தண்ணீர் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை யடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.