districts

img

புதுக்கோட்டையில் சிபிஎம் நிதி வசூல்: ஒரே நாளில் 140 குழுக்கள் களமிறங்கின

புதுக்கோட்டை, டிச.11 - புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நடந்த வெகுஜன வசூல் இயக்கத்தில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 200 ரூபாயை ஏழை, எளிய உழைக்கும் மக்கள் வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ரூ.50 லட்சம் வசூல்  செய்வது என கட்சியின் மாவட்டக் குழு  தீர்மானித்துள்ளது. இதில் 70 சதவீத நிதியை சாதாரண உழைக்கும் மக்களிடம்  வீடு வீடாகச் சென்று வசூல் செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதனொரு பகுதியாக டிச.10 (ஞாயிற் றுக்கிழமை) ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 142 குழுக்கள் களம் இறக்கப்பட்டன. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்ன துரை எம்எல்ஏ., மாவட்டச்  செயலாளர் எஸ்.கவி வர்மன் மற்றும் மாவட்ட செயற்குழு - மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலா ளர், இடைக்கமிட்டி உறுப் பினர்கள், கிளைச் செயலா ளர்கள் உட்பட ஆயிரத் துக்கும் அதிகமானோர் இந்த வசூல் இயக்கத்தில் ஈடுபட்டனர். அதனடிப்படையில் இடைக்கமிட்டிகள் வாரி யாக அன்னவாசல் ரூ.1, 02,650, குன்றாண்டார்கோ வில் ரூ.1,02,547, திரு வரங்குளம் மேற்கு ரூ. 40,039, பொன்னமராவதி ரூ.34,600, அறந்தாங்கி ரூ.31,410  கறம்பக்குடி வடக்கு ரூ.23,520, புதுகை ஒன்றியம் ரூ.16, 100, புதுகை நகரம் ரூ.12,000, கந்தர்வ கோட்டை வடக்கு ரூ.12,000, திருமயம் ரூ.10,050, மணமேல்குடி ரூ.6,124, விராலி மலை ரூ.5,560, அரிமளம் ரூ.5,190, கந்தர்வ கோட்டை தெற்கு ரூ.5,000, ஆவுடையார் கோவில் ரூ.4,200, திருவரங்குளம் கிழக்கு  ரூ.3200, கறம்பக்குடி தெற்கு ரூ.2010 என மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 200  ரூபாய் வீடு வீடாகச் சென்று வசூல் செய்யப் பட்டது.