districts

img

எய்டு இந்திய நிறுவனம் சார்பில் கந்தர்வகோட்டையை அடுத்து புனல்குளத்தில் ரூ.12 லட்சம்

எய்டு இந்திய நிறுவனம் சார்பில் கந்தர்வகோட்டையை அடுத்து புனல்குளத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் 5 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை தொடங்கி வைத்தார். கவிஞர் கவிவர்மன், எய்டு இந்தியா நிறுவன மாநில இணைச் செயலாளர் தாமோதரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, மாநில நிர்வாகி சாமிநாதன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜி.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.