ஸ்டடி சர்க்கிள் துவக்க விழா
தஞ்சாவூர், பிப்.11 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் நாடியம் ஊராட்சி, பிள்ளையார் திடலில் போட்டித் தேர்வுகளுக் கான கலாம் ஸ்டடி சர்க்கிள் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமை வகித்து தொ டங்கி வைத்தார். பட்டுக் கோட்டை வட்டாட்சியர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். பட்டுக் கோட்டை துணை வட் டாட்சியர் பாலசுப்ரமணி யன், கிராம நிர்வாக அலு வலர் பஷீர், ஒன்றியக் கவுன்சிலர் பாமா செந்தில் நாதன், நாடியம் ஊராட்சி மன்றத் தலைவர் பிரேம் செல்வன், பயிற்றுநர் நட ராஜன் மற்றும் மாணவ, மாணவிகள், தேர்வுக்கு தயாராவோர், பொது மக்கள் கலந்து கொண்ட னர்.
ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் ரூ.11 லட்சம் மோசடி
தஞ்சாவூர், பிப்.11- ரியல் எஸ்டேட் உரி மையாளரிடம் இணைய வழியில் ரூ.11 லட்சம் மோசடி செய்த மர்ம நபரைக் காவல்துறை யினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நாடி முத்து நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமை யாளருக்கு 2023 நவம்பர் 20 அன்று டெலிகிராம் செயலி மூலம் ஒரு தகவல் வந்தது. அதில், இணையவழியில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய ரியல் எஸ்டேட் உரிமையாளர், மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சம் அனுப்பினார். அதன் பின்னர், ரியல் எஸ்டேட் உரிமையாள ரின் அழைப்புகளை மர்ம நபர் எடுக்கவில்லை. இதன்மூலம் தான் ஏமாற் றப்பட்டதை உணர்ந்த ரியல் எஸ்டேட் உரிமை யாளர், தஞ்சாவூர் சைபர் குற்றக் காவல் பிரி வில் புகார் செய்தார். இதன்பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளியில் ஓவியப் போட்டி
புதுக்கோட்டை, பிப்.10 - திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஓவியப் போட்டி நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட் டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து 250 -க்கும் மேற்பட்ட மாண வர்கள் கலந்து கொண்ட னர். ஓவியம் வரைவதற்கு ‘பிளாஸ்டிக் இல்லாத இந்தியா’ என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது. எல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும், 17 வயதுக்கு மேற்பட்ட பிரி வினருக்கும் ஐந்து பிரிவு களாக போட்டிகள் நடத்தப் பட்டன. இந்தப் போட்டிகளை பள்ளியின் முதல்வர் தங்கம்மூர்த்தி வழி காட்டுதலின்படி, ரிகாப் இந்தியா டிரஸ்ட் தலை வர் சக்திவேல், மேலா ளர் நந்தினி சக்திவேல், ஜோ ஆர்ட் அகாதெமி நிறுவனர் அருள் ஜோசப் ஆகியோர் தலைமை யேற்று நடத்தினர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான் றிதழ்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டன.
பிப்.24 கும்பகோணம் மாசிமகம் திருவிழாவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்
கும்பகோணம், பிப்.11- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிப்ரவரி 24 அன்று மாசிமக திருவிழாவை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகத்தில் கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தலைமையில், கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா முன்னிலையில் கலந்தாலோசனை கூட்டம் நடை பெற்றது. இதில், மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடப்பது வழக்கம். இவ்விழாவில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படு கிறது. தீர்த்தவாரிக்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி புனித நீராடவும், கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வும் அனைத்துத் துறைகள் சார்பில் முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கும்பகோணம் மாநகரில் பல்வேறு பகுதிகளில் பக்தர் களின் வசதிக்காக தற்காலிக மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்புத் துறை வீரர்கள் மகாமக குளக் கரையில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும். பக்தர்களின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதிப் படுத்த வேண்டும். திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு அன்ன தானம் செய்ய விரும்பும் தன்னார்வ அமைப்புகள் முன்கூட்டியே கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப் பித்து, உரிய அனுமதி பெற வேண்டும் என கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
பிப்.16 பெரம்பலூரில் ஆட்டோக்கள் இயங்காது
பெரம்பலூர், பிப்.11 - அனைத்து வகையான ஓட்டுநர்கள் (சிஐடியு) சங்க கூட்டம் சனிக்கிழமை பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் நடைபெற்றது. கிளை தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். பிப்ரவரி 16 அன்று நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்தத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின் உரை யாற்றினார். ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி தீனதயாளன், மாவட்ட பொருளாளர் இன்ப ராஜ் ஆகியோர் உரையாற்றினர். பிப்.16 அகில இந்திய வேலை நிறுத்தம் அன்று ஆட்டோக்களை இயக்காமல் போராட்டத் தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. கவுல்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பு முன்பு அமைத்துள்ள சிஐடியு சங்க தகவல் பலகை கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நபர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாவட்ட ஆட்டோ ஓட்டியதை தடுத்த சிஐ டியு ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து பொய் புகார் அளித்த முருகையன் என்ப வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இலங்கைக்கு கடத்தவிருந்த 3 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
தூத்துக்குடி,பிப்.11- தூத்துக்குடி கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 3 டன் பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தூத்துக்குடி கடல் பகுதி வழியாக கடத்தல் கும்பல்கள் மூலம் மஞ்சள், டீசல் ,பீடி இலைகள் மற்றும் போதைப் பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் கியூ பிரிவு போலீசார் கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை தாளமுத்து நகர் அருகே உள்ள சிலுவைப்பட்டி கடற் கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் பீடி இலைகள் கடத்துவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் அப்பகுதிக் குச் சென்று சோதனையிட்டனர். கடற்கரைப் பகுதியில் போலீசாரை கண்டதும் கடத்தல் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர். 2 பைபர் படகுகளில் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள 3 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட இருந்த 2 பைபர் படகுகள், சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை யும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய கடத்தல் கும்பலை கியூ பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் மாற்றம்
தூத்துக்குடி,பிப்.11- தூத்துக்குடி, மதுரை மாநகராட்சி ஆணையாளர்களை மாற்றி தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தர விட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக இருந்த தினேஷ்குமார், மதுரை மாநகராட்சி ஆணைய ராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சி ஆணையாளராக இருந்த மதுபாலன் தூத்துக்குடி மாநக ராட்சி ஆணையாளராக நியமனம் செய்து உத்தரவிடப் பட்டுள்ளது. புதிய ஆணையாளர் மதுபாலன் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர் ஆவார்.
இரண்டாம் நிலை காவலர் பணி: நெல்லையில் 608 பேர் தேர்ச்சி
திருநெல்வேலி,பிப்.11- நெல்லையில் காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீய ணைப்புத்துறைகளில் இரண்டாம் நிலை காவலர் பணி களுக்கான உடல் தகுதித் தேர்வில் 608 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2023 -இல் நடைபெற்ற இதற்கான எழுத்துத் தேர்வில் 898பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களுக்கான உடல் திறன் தேர்வு நெல்லை மாவட்ட ஆயுதப்படை மைதா னத்தில் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்திறன் தேர்வு, கயிறு ஏறுதல், உயரம் தாண்டு தல், நீளம் தாண்டுதல், 100 மீ மற் றும் 200 மீ ஓட்டம் நடை பெற்றது. இறுதி நாளான சனிக்கிழமையன்று நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் ஆண்கள் 608 பேர் தேர்ச்சி பெற்ற னர்.
பிப்.14 இல் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
திருநெல்வேலி, பிப்.11- நெல்லை மாநகர ஊர்க்காவல் படைக்கு புதிதாக ஊர்க்காவல் படையினர் தேர்வு பாளையங் கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமையன்று (பிப்.14) காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர காவல் ஆணையர் அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது: நெல்லை மாநகர ஊர்க் காவல் படைக்கு புதிதாக 60 ஆண்கள், 8 பெண்கள் என மொத் தம் 68 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்காக பாளையங் கோட்டை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் புதன் கிழமை (பிப்.14) காலை 7 மணிமுதல் 10 மணிவரை தேர்வு நடைபெற உள்ளது. இத் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும், திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.மேலும், மார்பளவு வண்ண புகைப்படங்கள் 2, கல்வி தகுதிச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகிய அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குப்பைகளை எரித்தபோது தீக்காயமடைந்த பெண் பலி
தூத்துக்குடி,பிப்.11- தூத்துக்குடியில் குப்பைகளை தீ வைத்து எரித்தபோது தீக்காயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தூத்துக்குடி அருகே சாயர்புரம் செந்தியம்பலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி தெய்வக்கனி (47). இவர் பிப்ரவரி 1 ஆம் தேதி தனது வீட்டு முன்பு குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார்.அப் போது எதிர்பாராத விதமாக அவரது ஆடை யில் தீப்பற்றி பலத்த தீக்காயமடைந்தார். இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தெய்வக்கனி உயிரி ழந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி கட்டிடத் தொழிலாளி பலி
தூத்துக்குடி,பிப்.11- தூத்துக்குடியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிடத்தொழிலாளி மின்சா ரம் தாக்கி பலியானார். தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (45), கட்டிடத்தொழிலாளி. இவர் சனிக்கிழமையன்று தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள போல் பேட்டையில் ஒரு கட்டிடத் தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிங் மிஷினில் பலகையை வெட்டும்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் அதே இடத்தில் இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.4.9 கோடி மதிப்பில் பாக்குகள் பறிமுதல்
தூத்துக்குடி,பிப்.11- இந்தோனேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திவரப்பட்ட சுமாா் ரூ.4.9 கோடி மதிப்பிலான கொட்டைப் பாக்குகளை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இந்தோனேசியாவின் ஜகாா்த்தா துறைமுகத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு நான்கு கண்டெய்னா்களில் முந்திரி பருப்புகள் இறக்குமதி செய்யப்படுவதாக திருப்பூரைச் சோ்ந்த ஒரு நிறுவனம் அறிக்கை சமா்ப்பித்திருந்ததாம். இதுகுறித்த சந்தேகத்தின்பேரில் வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த நான்கு கண்டெய்னா்களையும் சோதனையிட்டனர். அதில் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில், முந்திரி பருப்புகளுக்கு பதிலாக கொட்டைப் பாக்குகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவற்றுக்கான ஆவணங்களை சோதித்தபோது, அதில் குறிப்பிடப்பட்டிருந்த பெயரில் எந்த நிறுவனமும் இயங்கவில்லை என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்த விசாரணையில், தூத்துக்குடி மில்லா்புரத்தைச் சோ்ந்த ரவிக்குமாா்(49) என்பவா் போலியாக ஒரு நிறுவன பெயரில் கொட்டைப் பாக்குகளை சட்ட விரோதமாக இறக்குமதி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ரவிக்குமாரை கைது செய்தனர். 4 கண்டெய்னா்களிலும் இருந்த சுமாா் 72 டன் எடையிலான கொட்டைப் பாக்குகளையும் பறிமுதல் செய்தனா். அவற்றின் மதிப்பு ரூ.4.9 கோடி இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே, இது போன்று கொட்டைப் பாக்குகள் கடத்தல் வழக்கில் ரவிக்குமாா் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது
நெல்லை கோட்ட அஞ்சலகங்களில் தங்கப்பத்திர விற்பனை இன்று துவக்கம்
திருநெல்வேலி, பிப்.11- நெல்லை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திர விற்பனை இன்று தொடங்குகிறது. இதுகுறித்து அஞ்சல் கோட்ட முது நிலை கண்காணிப்பாளர் கோ.சிவாஜி கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசு தங்கப் பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது. 1 கிராம் 24 காரட் தங்கப் பத்திரத்தின் விலை ரூ.6,263 ஆகும். தங்கப் பத்திர விற்பனை திங்கள்கிழமை (பிப்.12) முதல் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தனிநபர் ஒருவர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் 1 கிராம் முதல் அதிகபட்சம் 4 கிலோ வரை வாங்கலாம். மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீத வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் உள்ள விலைக்கு நிகராக பணமும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பான் கார்டுடன், ஆதார் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, பாஸ் போர்ட் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசிய மயமாக்கப் பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு அனைத்து அஞ்சலகங்களிலும் “தங்கப் பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி தாளாளர் கைது
கல்லூரிக்கு சீல்வைப்பு
கல்லூரிக்கு சீல்வைப்பு தென்காசி,பிப்.11- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியைச் சேர்ந்த வர் வினோத்குமார் ( 32). இவர் பாவூர்சத்தி ரம் இ.பி. காலனியில் வசித்து வருகிறார். தென்காசி-நெல்லை சாலையில் பாவூர்சத்தி ரத்தில் உள்ள டிப்ளமோ நர்சிங் பாரா மெடிக்கல் கல்லூரியில் தாளாளராக உள்ளார். இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் வினோத்குமார், தனது கல்லூரி மாணவி ஒருவருக்கு அடிக்கடி பாலி யல் தொல்லை கொடுத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாவூர்சத்திரம் காவல்துறைக்கு தெரிவித்த னர். பின்னர் இதுதொடர்பாக ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் காவல்துறை யினர் விசாரணை நடத்தி வினோத்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை தென்காசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங் கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் உத்தர வின் பேரில் உதவி ஆட்சியர் (பொறுப்பு) அனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் மதி வதனா, தாசில்தார் பட்டமுத்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் லட்சுமி பிரபா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலர் அருண் பிரசாத் ஆகியோர் கல்லூரிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் கல்லூரி வளாகத்திற்கு ‘சீல்’ வைத்தனர். அங்கு படிக்கும் மாணவிகள் வேறு கல்லூ ரிக்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரித்தனர்.
பிப்.17 நெல்லையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்
திருநெல்வேலி, பிப்.11- பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப்.17) நடை பெறவுள்ளது இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாபெரும் தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையங்கோட்டை தூயயோவான் கல்லூரியில் சனிக் கிழமை (பிப்.17) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடை பெற வுள்ளது. இதில், 5-ஆம் வகுப்பு முதல் 10, 12-ஆம் வகுப்பு பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. போன்ற கல்வித் தகுதியு டைய அனைவரும் கலந்துகொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தேர்வு செய்ய வுள்ளன. இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுய விவ ரம், கல்விச்சான்று ஆதார் அட்டை ஆகிய வற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகா மில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலை நாடுநர்கள் தனியார் துறை நிறு வனங்கள் தமிழ்நாடு அரசு தனியார் வேலை வாய்ப்பு இணையதளத்தில் (www.tnprivate jobs.tn.gov.in) பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு தகவல் களை பெற NELLAI EMPLOYMENT OFFICE என்ற Telegram channel இல் இணைந்து பயன் பெறலாம். இம் முகாமில் பணி நியமனம் பெறும் பதிவு தாரர்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிபிஎம் போராட்ட அறிவிப்பால் பார்வதிபுரம் சாலை சீரமைப்பு
நாகர்கோவில், பிப்.11- நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை யில் பார்வதிபுரம் பேருந்து நிலையம் அருகில் மேம்பாலத் தின் அடியில் உள்ள சாலையில் ஏற்பட்ட குழிகளை கடந்த சில மாதங்களாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் தடுமாறி விழுந்து காய மடைந்துள்ளனர். இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராஜாக்கமங்கலம் வட்டாரச் செயலா ளர் எஸ்.ற்றி.ராஜ்குமார் மாவட்ட ஆட்சியரிடமும், தேசிய நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தார். கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தியும் குழிகளை நிரப்பி சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து கட்சியின் சார்பில் செவ்வாயன்று (பிப்.13) சாலை யில் வாழை நடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சனிக்கிழமையன்று அவசர அவசரமாக குழிகளை மட்டும் நிரப்பி தார் பூசியுள்ளனர். இந்த சாலை யில் வேறு சில பகுதிகளில் உள்ள குழிகளும் நிரப்பப்பட வேண்டும் என வலியுறுத்துவதாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.எஸ்.கண்ணன் தெரிவித்தார்