திருச்சிராப்பள்ளி, ஏப்.2- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தோட்டக் கலைப் பயிர்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் முந்திரி, தென்னை பயிர்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க சிறு, குறு விவ சாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கர் முதல் ஐந்து ஏக்கர் வரையிலும், இதர விவசாயிகள் அதிகபட்சம் 12.5 ஏக்கர் வரையிலும் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கலாம். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சொட்டு நீர்ப்பாச னம் அமைத்திருந்தால், இப்போது புதிதாக அமைத் துக் கொள்ளலாம். இத்திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளைஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் துணை நிலை நீர் மேலாண்மை திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில், நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் மோட்டார் அல்லது மின்மோட்டார் அமைக்க ரூ.15 ஆயிரம், தரைநிலை நீர்தேக்கத் தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம், பிவிசி குழாய்கள் பெற்றுக் கொள்ள ரூ.10 ஆயிரம் மானி யம் வழங்கப்படுகிறது. நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நிலை நீர் மேலாண்மை சிறப்புத் திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். விருப்பமுள்ள விவசாயிகள் கணிணி சிட்டா, அடங்கல், ரேஷன்கார்டு நகல், ஆதார் நகல், நில வரைப்படம், பாஸ்போர்ட் அளவு போட்டோ மூன்று, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட சிறு, குறு விவசாயி சான்று, மண், நீர் பரிசோதனை அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை http://tnhorticulture.tn.gov. in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலு வலக வளாகத்தில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.