திண்டுக்கல், மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந் தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டி யிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் திங்களன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்த லில் இந்தியாவில் ஒரு மகத்தான கூட் டணி உருவாகி உள்ளது. தேர்தல் வாக்குகள் எண்ணி முடிவடையும் போது, மோடி அரசாங்கம் வங்கக் கடலிலே தூக்கியெறியப்பட்டது என் கிற நிலையை உருவாக்க உள்ள தேர் தல் முடிவு வரத்தான் போகிறது. வட இந்திய மாநிலங்களில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பா ளர்கள் 16 பேர் எங்களுக்கு பாஜக வில் வேட்பாளர் சீட் வேண்டாம் என்று விலகி ஓடியுள்ள நிலை, மோடி தலை மையிலான பாஜகவிற்கு ஏற்பட்டி ருக்கிறது. இன்றைக்கும் நாட்டின் பாதுகாப்பு துணை ஒன்றிய அமைச்ச ராக கேபினட் அமைச்சராக உள்ள வி.கே.சிங், நான் பாஜக வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் மோடி ஆட்சி பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளால் மத்தி யில் ஒரு ஆட்சி மாற்றம் நடந்தே தீரும் என்ற நிலை உருவாகி உள்ளது என்ற செய்தி வந்து கொண்டிருக்கிறது’’ என்று கூறினார். ‘தூக்கத்தில் கூட அரிவாள் சுத்தியல் சின்னம் நினைவுக்கு வர வேண்டும்’ அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகை யில், ‘‘ஏப்ரல் 19-ம் தேதி வரை அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் என்று தூங்கும் போது கூட சொல்லிக்கொண்டே தூங்க வேண்டும். ஏழை பங்காளிகளின் சின் னம், பாட்டாளி மக்களின் சின்னம், அந்த சின்னம் நமக்கு கிடைத்திருப் பது பெருமை. பாட்டாளிகளுக்கான கட்சியான சிபிஎம் நமது இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பது நமக் கெல்லாம் பெருமை’’ என்று கூறி னார்.