districts

img

திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் வெற்றிக்காக உழைப்போம்!

திண்டுக்கல் தொகுதியில் அதிமுக அணியில் எஸ்டிபிஐ கட்சி போட்டியிடுகிறது; மாவட்டத்தில் ஒரு இஸ்லாமியருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது;  அவரை மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்குமா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை; எஸ்டிபிஐ வேட்பாளருக்கு எதிராகத்தான் நாங்கள் வாக்களிப்போம் என்கிறார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா. 

இந்தியா கூட்டணியிலும் கூடஇராமநாதபுரத்தில் நவாஸ் கனி போட்டியிடுகிறார்; அவருக்கு  ஆதரவாக எஸ்டிபிஐ  வேலை செய்யுமா? பிரச்சாரம் செய்யுமா? என கேள்வி எழுப்பிய ஜவாஹிருல்லா, இந்த பார்வை தவறானது என்று குறிப்பிட்டதோடு, ‘‘எங்கள் கூட்டணியில் (இந்தியா கூட்டணி)  நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு சீட் கேட்க முயற்சி செய்தோம்; கிடைக்கவில்லை. அதற்காக எதிரணிக்கு ஆதரவாக செயல்பட்டு விடமாட்டோம். 

குறிப்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக தோளோடு தோள் நிற்கும் கட்சி. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி எடுத்துச் சென்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். எங்களை பொறுத்தவரை திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் மிக அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவரது வெற்றிக்காக நாங்கள் வேலை செய்வோம்” என்றார்.