சின்னாளபட்டி, பிப்.25- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட் டையை அடுத்த முதுவனூத்து ஊராட்சிக்கு உட்பட்டது மிளகாய்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் குடியிருப்புகளின் மிக அருகே தனியார் கல்குவாரி பத்து ஆண்டுகளுக்கு முன் செயல்பட்டு வந்தது. அப்பகுதி மக்க ளின் பெரும் போராட்டத்தால் மூடப்பட்ட கல்குவாரியில் கடந்த சில மாதங்களாக மீண்டும் அனுமதியின்றி இரவுபகலாக பாறைகளை உடைத்து வருவதாகவும் டெட்டனேட்டரை வெடிக்க வைத்து பாறை கள் உடைக்கப்படுவதால் நில அதிர்வு மற்றும் தூசுகள், கற்துகள்கள் பறப்பதாக வும் மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் வருவாய்துறையினர். கனிமவளத் துறையினர் நடவடிக்கை எடுத்து கல்குவா ரியைத் தடைசெய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். இப்பிரச்சனை குறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ஏ பாலசுப்ரமணியம் கூறுகையில், “மூடப் பட்ட குவாரி மீண்டும் இயங்கி வருகிறது இது எப்படி இயங்குகிறது என்று தெரிய வில்லை. இது சம்மந்தமாக மனுக் கொடுத் தும் பலனில்லை. கல் குவாரியைச் சுற்றி யுள்ள கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன கிணறுகளில் நீரைப் பார்த்து பல மாதங்களாகிவிட்டது. கடந்த மாதம் ஒரு பெரியவரின் தலையில் கற் துகள்கள் விழுந்து சிறு காயங்களுடன் தப்பினார். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்கள் ஊரை காலி செய்யும் நிலை தான் உருவாகும்” என் றார்.