districts

img

பழிவாங்கும் நடவடிக்கையாக நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மெமோ திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரைக் கண்டித்து ஊழியர்கள் போராட்டம்

திண்டுக்கல். மார்ச். 31 திண்டுக்கல் மாநகராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மெமோ வழங்கிய மாநகராட்சி ஆணையரைக் கண்டித்து மார்ச் 31 அன்று அனைத்து ஊழியர்க ளும் காத்திருக்கும் போராட்டத் ்தில் ஈடுபட்டனர்.   திண்டுக்கல் மாநகராட்சியில் கடந்த 18 மாதங்களாக ஆணைய ராக பணியாற்றி வருபவர் சிவ சுப்ரமணி.  இவர் மார்ச் 31 ஆம்  தேதி இவர் பணி ஓய்வு பெறுகிறார். தான் ஓய்வு பெறுவதற்கு முன் பாக ஆடிட் அப்ஜெக்சன் இருக்கக் கூடாது என்று அனைத்து அலுவ லர்களையும் கடந்த 2 மாதங்க ளாக கடுமையாக வேலை வாங்கி யுள்ளார். இந்த 2 மாதங்களில் தனது கட்டளைக்கு அடிபணிந்து பணியாற்றாத எந்த ஊழியராக இருந்தாலும் அவருக்கு மெமோ  கொடுத்துள்ளார். அனைத்து ஊழியர், அலுவலர்களுக்கும் மாந கராட்சி குற்றக்குறிப்பாணை 8(1), 8(2) வழங்கியுள்ளார். அலுவலர் கள் 71 பேருக்கும், துப்புரவு பணியா ளர்கள் 20 பேருக்கும், மலேரியா பிரிவில் உள்ள 7 பேருக்கு என 98  பேருக்கு குற்றக்குறிப்பாணை வழங்கியுள்ளார். இந்த குறிப் பாணை வழங்கப்பட்டால் அது அவர்களது எஸ்.ஆர். என்று சொல்லக்கூடிய தன்பதிவேட்டில் பதிவாகிவிடும். அப்படி பதிவா னால் அவர்களின் பதவி உயர்வு பாதிக்கப்படும் என்ற நிலை உள்ளது.  மேலும் மலோரியா பிரிவில் பணியாற்றும் பலருக்கு 3 மெமோ வரை கொடுத்துள்ளார். மேலும் சுகாதார ஆய்வாளர்களை வாக்கி டாக்கியில் மிகவும் கேவலமாக ஒருமையில் பேசியுள்ளார். குறிப் பாக எஸ்.ஐ. தங்கவேல் என்பவரை கடுமையாக பேசியதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக வெள்ளி யன்று பிற்பகல் 3 மணி அளவில் எஸ்.ஐ. தங்கவேல், எஸ்.ஐ.முரு கையா, டவுன் பிளானிங் இள நிலை பொறியாளர் தன்ராஜ் ஆகி யோர் குறித்து தமிழ்நாடு நக ராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் முரு கானந்தம்  ஆணையர் சிவசுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.  பேச்சுவார்த்தையில் ஆணையர் சிவசுப்ரமணி எந்த வகையிலும் உடன்பட்டு வரவில்லை. அதே போல் ஊழியர்கள், அலுவலர்கள் மீது போடப்பட்ட குற்றச்சாட்டு குறிப்பாணைகளை நீக்கவும் மறுத்துவிட்டார்.  இதனையடுத்து ஆணைய ரைக் கண்டித்து மாநகராட்சி அலுவ லர்கள், ஊழியர்கள் அனைவரும் அலுவலை புறக்கணித்து ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பா ட்டம் முற்றுகை போராட்டமாக மாறியது. தற்போது காத்திருக்கும் போராட்டமாக மாறியுள்ளது. இது தொடர்பாக முருகானந்தம் கூறு கையில், ஆணையர் பணி ஓய்வு பெறுவதையடுத்து பழிவாங்கும் நடவடிக்கையாக ஊழியர்கள், அலுவலர்கள் மீது போடப் பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டு குறிப்பாணைகளை வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ்பெற வில்லை என்றால் குறிப்பாணை களை வாபஸ் பெறும் வரை இந்த போராட்டம் நீடிக்கும் என்று தெரி வித்தார்.  போராட்டத்தை ஆதரித்து  சிஐடியு மாவட்டச்செயலாளர் கே. பிரபாகரன்,  சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்க மாவட் டச்செயலாளர் தனசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் எஸ்.முபாரக்அலி, மாவட்டச் செயலாளர் விவேகானந்தன், மாவட்ட நிர்வாகிகள் ராஜமாணிக் கம், ஜெசி, உள்ளிட்ட பலர் பேசினர். (நநி)
இரவு பகலாக வேலை வாங்கிய ஆணையர்
பொதுவாக அரசு வேலை என் றால் 8 மணி நேரம் தான். ஆனால் மாநகாட்சியில் பணியாற்றும் மலே ரியா பிரிவு, மற்றும் சுகாதார ஆய்வாளர், துப்புரவுப்பணியா ளர்களுக்கு எப்போதும் வேலை  தான். சமீபத்தில் தேர்தல் ஆணை யம் மூலம் கருடா ஆப் என்று ஒரு ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த செயலியில் ஒவ்வொரு வாக்காளரின் ஆதார் எண், ஓட்டு ஐ.டி.யை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்று ஊழியர்கள் வேத னையுடன் தெரிவித்தார். இந்த பணியை கூடுதல் பணியாக செய்ய வேண்டும். பொதுவாக படிக்காத வர்கள் இந்த ஆப்பை பயன்படுத்து வது சிரமம். ஒரு நாளைக்கு 25 பேரை பதிவு செய்வது கூட கடினம். ஆனால் ஆணையர் 200 பேரை சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார். ஒரு ஊழியர் தனது வேலையை முடித்துவிட்டு மற்ற நேரங்களில் இந்த ஆப் பணியை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர். காலை 6 மணிக்கு வேலைக்கு வர வேண்டும். ஒரு மணிக்கு உணவு இடைவேளை. பிறகு 2 மணியிலி ருந்து மாலை 6 மணி வரை வேலை. அதன் பிறகு ஆப் பணி என்று பணியாற்ற வேண்டும் என்று ஊழியர்கள் கசக்கி பிழியப் பட்டார்கள். இதனால் ஊழியர்க ளில் உள்ள சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் பெரும் துன்பத் திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் தான் பணியில் சுணக்கம் காட்டியதாகக்கூறி ஊழி யர்களுக்கு குறிப்பாணை மேல் குறிப்பாணை வழங்கப்பட்டுள் ளது. ஆணையரின் இத்தகைய ஊழியர் விரோதப் போக்கு காரண மாகத்தான் தற்போது ஓய்வு பெறும் நாளில் ஊழியர்கள், அலு வலர்கள் என ஒட்டுமொத்தமாக கள மிறங்கி போராடி வருகிறார்கள்.  (நநி)