districts

img

புத்தகங்களுடன் புத்தாண்டு விழா

திண்டுக்கல், டிச.31- திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இலக்கியக்களம் சார்பில் புத்தகங்களுடன் புத்தாண்டு விழா ஞாயிறன்று கொண்டா டப்பட்டது. மேலும் புத்தக விற்பனை, கண்காட்சி நடைபெற்றது. 

இதில், பாரதி புத்தகாலயம், நியூ சென்  சுரி புக் ஹவுஸ், வெற்றி மொழிப்பதிப்பகம் ஆகிய புத்தக நிலையங்கள் சார்பில் புத்த கங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

நிகழ்ச்சிக்கு இலக்கியக்கள தலைவர் ரெ.மனோகரன் தலைமை வகித்தார். திண்  டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சுப.கம லக்கண்ணன், இலக்கியக் கள செயலா ளர் ச.இராமமூர்த்தி, நிர்வாகிகள் பெ. கோவிந்தராஜ், பேராசிரியர்கள் க.மணி வண்ணன், சரவணன், பாலசுந்தரி, ராதா கிருஷ்ணன், கவிஞர் சுசீலாமேரி, பாடகர்  கோபால், ஆசிரியர் ஷாஜகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதே போல் சென்னை சில்க்ஸ் எதிரில்  உள்ள நியு சென்சுரி புக் ஹவுஸ் ஷோரு மில் படைப்பாளர்கள், வாசகர்கள் சார்பாக  புத்தாண்டு விழா நடைபெற்றது. விழாவில்  கிளை மேலாளர் அய்யப்பன் வரவேற்றார்.  பாலபுரஸ்கார் விருதாளர் மா.கமலவேலன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் சிவக் குமார் முன்னிலை வகித்தார். 

கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் சேரிவாணன், பார்வதி கல்லூரி தமிழ்த்துறை பேரா சிரியர் மு.மணிமேகலை, வழக்கறிஞர் சுதந்  திராதேவி, முனைவர் சுஜாதா, கவிஞர்கள் பாண்டியராஜ், சொக்கமேளா, ஜெனிபர், நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

இன்று விற்பனை கண்காட்சி
திங்களன்று பேருந்து நிலையத்தில் பாரதி புத்தகாலயம் சார்பில் விற்பனை  கண்காட்சி நடைபெறுகிறது. சிபிஎம் மாமன்ற உறுப்பினர் கே.எஸ்.கணேசன்  தலைமை வகிக்கிறார். என்.காந்தி வர வேற்கிறார். திண்டுக்கல் மாமன்ற மேயர் கண்காட்சியை திறந்து வைக்கிறார். 

காந்தி கிராம பல்கலை., முன்னாள அரசியல் பொருளாதாரத்துறை தலைவர் க.பழனிதுரை, இலக்கிய கள நிர்வாகிகள் க.மணிவண்ணன், பாலசுந்தரி, சீட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் பி.முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசு கின்றனர். 

இதே போல் பழனியில் பாரதி புத்தகால யம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறி வியல் இயக்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் திங்களன்று பேருந்து நிலையம்  அருகில் புத்தக விற்பனை நடைபெறு கிறது.

 நிகழ்ச்சிக்கு குருசாமி தலைமை வகிக்கி றார். பழனிக்குமார் வரவேற்கிறார். எழுத்தா ளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இரா.ராசேந்திரன், பழனி வட்டாட்சியர் மங்கள பாண்டியன், தமுஎகச நிர்வாகிகள் நாவ லாசிரிய் வரத.ராஜமாணிக்கம், எழுத்தா ளர் முனைவர் மீனாசுந்தர், சோ.முத்து மாணிக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்க  முன்னாள் மாநில தலைவர் சோ.மோகனா  ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.