நத்தம், பிப்.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் தேசிய மகளிர் ஆணை யம் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல்- குற்றவியல் நடுவர் மன்ற பொறுப்பு நீதிபதி பிரியா தலைமை தாங்கினார். வழக்கறிஞர்கள் ரவிச்சந்திரன், அம்சவள்ளி, காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சுசீலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசப்பட்டது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள், சமூகநலத்துறையினர், ஆசிரியைகள் கலந்துகொண்டனர்.