திண்டுக்கல் மாவட்டம், பள்ளபட்டி கிராமத்தில் தோல் கழிவுநீர் பொது சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் சிபிஎம் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் ஜூன் 22 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அருகில மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், நாடாளுமன்ற உறுப்பினர் ப.வேலுச்சாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ச.தினேஷ்குமார் உட்பட பலர் உள்ளனர்.