பழனி, ஜூலை 7 - திண்டுக்கல் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் கொய்யா விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனையானதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான ஆயக்குடி, அமரபூண்டி, கணக்கன் பட்டி, கோம்பைபட்டி, சட்டப்பாறை உள்ளிட்ட இடங்களில் கொய்யா சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள தோட்டங்களில் விளை விக்கப்படும் கொய்யா காய்கள், ஆயக்குடி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. சந்தை யில் கொய்யா காய்கள் தரம் பிரிக்கப் பட்டு, அதற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொய்யா பழத்து க்கு பிரசித்தி பெற்ற ஆயக்குடியில் தின மும் காலையில் சந்தை நடைபெறு கிறது. இந்த சந்தைக்கு உள்ளூர், வெளி யூர் வியாபாரிகள் போட்டி போட்டு கொய்யாவை வாங்கிச் செல்வது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக ஆயக்குடியில் இருந்து கேரள மாநிலத்துக்கு அதிக அளவில் கொய்யா அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படு கிறது. ஆயக்குடி சந்தைக்கு ‘பனாரஸ்’, ‘லக்னோ’ ஆகிய இரண்டு ரக கொய்யா காய்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யா ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையானது. வியாபாரிகள் போட்டி போட்டு கொய்யாவை வாங்கிச் சென்றனர். இந்த நிலையில் சீசன் தொடங்கி உள்ளதால், சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயக்குடி சந்தைக்கு கொய்யா வரத்து அதிகமாகி உள்ளது. இதனால் கொய்யா பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது 20 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி கொய்யா ரூ.200 முதல் ரூ.350 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி யால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், “கொய்யா விலை கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இத னால் காய் பறிப்பு கூலி, வண்டி வாட கை கட்டணம் கொடுக்க கூட வரு மானம் கிடைப்பதில்லை. குறிப்பாக கொய்யா தோட்டங்களை குத்தகைக்கு எடுத்த விவசாயிகள் கடும் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே சீசன் காலத்தில் கொய்யாவை இருப்பு வைத்து விற்கும் வகையில், ஆயக்குடி யில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்” என்று கூறினர்.