திண்டுக்கல், பிப்.15- திண்டுக்கல்லில் நோய் தொற்று பரப்பும் குப்பைக்கிடங்கை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி கட்டுப் பாட்டில் உள்ள குப்பைக் கிடங்கு முருகபவனம் அருகில் அமைந்துள் ளது. திண்டுக்கல் நகராட்சியாக இருந்த காலம் முதல் இந்த குப் பைக்கிடங்கு உள்ளது. தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட் டுள்ளது. மக்கள் தொகையும் அதி கரித்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது இந்த குப்பைக்கிடங்கை பொன் மான்துறை ஊராட்சிக்கு இடமாற்றம் செய்வதாக மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால் அதற் கான எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை. ஆனால் மாநகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து கம்போஸ்ட் உரம் தயாரிப்பதற்கு பதி லாக குப்பைக்கிடங்கில் தீ வைத்து எரிக்கிற வேலையை ஊழியர்கள் செய்கிறார்கள். இந்த புகை மண்ட லத்தால் கண் எரிச்சல், மன உலைச் சல், சுவாசக்கோளாறு மற்றும் தொற்று நோய்களால் சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்படுகி றார்கள். முருகபவனம் அல்லாமல் இந்திரா நகர், முத்துராஜ் நகர், ஓ.சி. பிள்ளை நகர் என் சுற்று பகுதியில் உள்ள குடியிருப்பு மக்கள் அனை வரும் இதனால் கடும் பாதிப்புக்குள் ளாகி உள்ளனர். மேலும் நிலத்தடி நீரும் குடிக்க லாயக்கற்றதாக கழிவு நீராக மாறி வருகிறது. எனவே இந்த குப்பைக்கிடங்கை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பாக முருகபவ னத்தில் செவ்வாயன்று மாலையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கட்சியின் திண்டுக்கல் ஒன்றியக் குழு சார்பாக நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு சிபிஎம் 2வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பி.செல்வநாயகன் தலைமை வகித் தார். அடியனூத்து ஊராட்சித்தலை வர் ஏ.ஜீவானந்தம், 13வது வார்டு சிபிஎம் ஒன்றியக்கவுன்சிலர் ஜே. ஜீவா, சிபிஎம் திண்டுக்கல் மாமன்ற உறுப்பினர்கள் கே.மாரியம்மாள், கே.எஸ்.கணேசன், எஸ்.ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் கே.பாலபாரதி, மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆஸாத், தா.அஜாய் கோஷ், கே.ஆர்.பாலாஜி, கே.முகேஷ், ஒன்றியச்செயலாளர் ஆர்.சரத் குமார், நகரச்செயலாளர் ஏ.அரபு முகமது ஆகியோர் பேசினர். (நநி)