முதல்வருக்கு பெ.சண்முகம் கோரிக்கை சின்னாளப்பட்டி, பிப்.15- திண்டுக்கல் அம்மையநாயக்க னூர் காவல் நிலையத்தில் விஷம் அருந்தி, காவல்துறையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த விவ சாயி குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு 25 லட்சம் ரூபாய் இழப்பீடும் அரசு வேலையும் வழங்க வேண் டும். பணியிலிருந்த காவல் ஆய்வா ளர் உள்ளிட்டு அனைத்து காவலர் களையும் பணி நீக்கம் செய்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் அம்மை யநாயக்கனூர் காவல் நிலையத் தில் கன்னிமார்நகரை சேர்ந்த விவ சாயி பாண்டி ( வயது 50) ,நிலத்தக ராறில் தனக்கு நெருக்கடி கொடுப்ப தாக புகார் அளித்தும், நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆணை பெற் றும் நடவடிக்கை எடுக்காத நிலை யில் மன உளைச்சலில் காவல் நிலையத்தில், காவல்துறை ஆய் வாளர் மற்றும் காவலர்கள் முன்னி லையில் விஷம் அருந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலை யில், அவரது குடும்பத்தினரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி னார். இதுகுறித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் “ அம்மைநாயக்க னூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், காவலர்கள் உட்பட அனைவரும் இருந்தும், விஷமருந் திய விவசாயி பாண்டியை தடுப்ப தற்கான எந்தவித நடவடிக்கையும் இல்லை. இத்தகைய துயர முடிவை அவர் எடுத்ததற்கு கார ணம் காவல்துறையினர், பாண்டி கொடுத்த புகாரின் மீது நீண்ட நாட்க ளாக நடவடிக்கை எடுக்காததே ஆகும். பிறகு விவசாயி பாண்டி நீதி மன்றம் சென்று நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றும், அந்த உத்த ரவையும் காவல்துறையினர் மதிக்காமல் கிடப்பில் போட்டுள்ள னர். ஆகவே முழுக்க முழுக்க பாண் டியின் துயர முடிவுக்கு காரணம் அவர் மனு மீது நடவடிக்கை எடுக் காமல் காவல்துறை காலம் தாழ்த்தி யதோடு மட்டுமல்லாமல், அவமா னப்படுத்தியது, இது போன்ற நட வடிக்கைகள்தான் அடிப்படை யான காரணமாக உள்ளது. ஆகவே பாண்டியினுடைய மர ணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் உட்பட அன்றைய தினம் பணியில் இருந்த அனைத்து காவலர்களும் பணிநீக்கம் செய் யப்பட வேண்டும். அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து அவர் கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் . காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து ஓராண்டாகியும் புகாரின் மீது நட வடிக்கை எடுக்காததன் விளைவு தான் இந்த துயரச் சம்பவம். தமிழ்நாடு முழுவதும் இருக் கக்கூடிய காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கக் கூடிய புகார்களுக்கு எவ்விதமான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் தான் அம்மையநாயக்கனூர் காவல் நிலையம். தமிழ்நாடு காவல்துறை, பொது மக்கள் அளிக்கக் கூடிய புகார் களுக்கு உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். காவல் நிலையத்தில் மனிதாபிமானமற்ற முறையில் கொஞ்சமும் கருணை இல்லாமல் வெளி வந்திருக்கிற வீடியோவை பார்த்தால் மனிதன் உயிருக்கு போராடுகின்ற பொழுது காவல் ஆய்வாளர் பேண்ட் பாக்கெட்டில் கையை வைத்துக்கொண்டு மன சாட்சி அற்ற முறையில் நடந்து கொள்வது , பார்ப்போர் அனை வருக்கும் கோபத்தை ஏற்படுத்து கிறது. இத்தகைய காவல்துறை யின் நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே காவல்துறையை தன் வசம் வைத்துள்ள தமிழ்நாடு முத லமைச்சர் இந்த விஷயத்தில் தலை யிட்டு காவல் நிலையத்தில் இருந்த அனைத்து காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண் டும். பாண்டியினுடைய மரணத் திற்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டும். அவருடைய இறப் பிற்கு தமிழ்நாடு அரசாங்கம் உட னடியாக இழப்பீடு வழங்க வேண் டும். அவரது மகன் சதீஷ் கண்ண னுக்கு அரசு வேலை வழங்குவ தன் மூலமாக அவரது குடும்பத்தை பாதுகாப்பதற்கு தமிழ்நாடு அர சாங்கம் முன் வர வேண்டும்.
நிலக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம்
இறந்த பாண்டியினுடைய நிலத்தை பாதுகாப்பதற்கு, தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது சட்டப்படியான நட வடிக்கை எடுக்கவும் தமிழ்நாடு அரசு இதற்குப் பிறவாவது முன்வர வேண்டும். இறந்துபோன பாண்டியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 25 லட் சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண் டும். நியாயமான கோரிக்கையை உடனடியாக தமிழ்நாடு அரசு நிறை வேற்ற வேண்டும். இதில் காலம் தாழ்த்தக்கூடாது. நாளை ( வியா ழன்) பாண்டியின் இறப்பிற்கு நீதி கேட்டு நிலக்கோட்டையில் பிரம் மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பெருமாள், மாவட்டச் செயலாளர் ராமசாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நிலக்கோட்டை ஒன்றியச் செயலாளர் செந்தில், மாவட்டக்குழு உறுப்பினர் சௌந்த ரராஜன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.