districts

img

நத்தம் பகுதியில் பயிர்களை, மரங்களை சேதப்படுத்தும் காட்டெருமைகள் தடுப்பு வேலிகள் அமைக்க கோரிக்கை

நத்தம், ஜூன் 15- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி யில் அழகர் மலை, கரந்த மலை, சிறு மலை தொடர்ச்சி உள்ளிட்ட பல்வேறு மலைகளும், குன்றுகளும் இந்த மலை களை சுற்றி மூங்கில்பட்டி, பட்டணம் பட்டி, காசம்பட்டி, வத்திபட்டி, லிங்க வாடி, வேம்பரளி, மலையூர், முளையூர், உலுப்பகுடி, குட்டுப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.  இப்பகுதிகளில் மாமரங்கள், சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகள் பயிரிடப்பட்டுள்ளது. தற்  போது மலைகளில் இருந்து ஆங் காங்கே காட்டெருமைகள் கூட்டம் கூட்ட மாக இறங்கி வருகின்றன. ஜூன் 14  அன்று அதிகாலை குட்டுப்பட்டி பகுதி யில் இறங்கிய 10-க்கும் மேற்பட்ட காட்  டெருமைகள் அந்தப் பகுதியில் பயி ரிடப்பட்டுள்ள பயிர் வகைகளையும், மரங்களையும் சேதப்படுத்தியது. இத னால் அச்சமடைந்துள்ள விவசாயிகள் காட்டெருமைகளை விரட்ட முடியாமல் பரிதவிக்கின்றனர்.  இதுகுறித்து குட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன் (45) என்பவர் கூறுகையில், வருடந்தோறும் காட்டெருமைகள் தொந்தரவுகள் அதி கரித்து வருகின்றன. இதற்கு வனத் துறை நிர்வாகம் தான் தடுப்பு நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தடுப்பு வேலிகளும் அமைக்க வேண்டும். இது தவிர காட்டெருமைகள் தண்  ணீர் பருகுவதற்கு ஆங்காங்கே மலை களை சுற்றி குடிநீர் தொட்டிகள் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இரவு நேரத் தில் விவசாயிகள் காவலுக்கு கூட போக முடியவில்லை. அச்சத்துடன் இருக்கிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என்று வலியுறுத்தினார்.