districts

img

5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அரசுப் பள்ளிக்கு பேருந்து இயக்கம் சிபிஎம் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி

திண்டுக்கல், ஜுன் 14- திண்டுக்கல் அருகே 5 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அரசு பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வந்த அரசு  பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்  ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றியக்கவுன்சிலர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்டி கௌர விக்கப்பட்டது.  திண்டுக்கல் அருகே செட்டிநாயக் கன்பட்டி ஊரில் அரசு மேல் நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப்  பள்ளி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு  துவங்கப்பட்டது. இந்த பள்ளிக்கு சுற்று வட்டார கிராமத்தில் வசிக்கும் ஏழை எளிய மாணவர்கள் மாணவியர்கள் வந்து படிக்கிறார்கள். இவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பலர் படிப்பை பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது. இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தலைமையாசிரியர், சாந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்  றிய கவுன்சிலர் செல்வநாயகம் முன் னாள் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வகணேசன் ஆகி யோர் திண்டுக்கல் ஆட்சியர் விசா கனை சந்தித்து மனுக்கொடுத்தனர். இத னையடுத்து ஆட்சியர் விசாகன் உத்தர வின் பேரில் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு  அரசு பேருந்து பள்ளிக்கு விடப்பட்டது. இதனால் பள்ளி நிர்வாகமும் மாணவ மாணவியர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். செவ்வாயன்று வந்த பேருந்தை வரவேற்ற தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் ஆசிரியர், ஆசிரி யர்கள், மாணவ, மாணவியர்கள் பொது மக்கள் ஆகியோர் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர்.

இதே போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயக மும் சால்வை அணிவித்து கௌர வித்தார்.  பேசிய தலைமையாசிரியை வாழ்த்திப் பேசுகையில், காலையில் குறித்த நேரத்தில் பள்ளி திறக்கும் பொழுது பேருந்து வருவது நல்ல விஷ யம் அதேவேளையில் மாலையிலும் குறித்த நேரத்தில் பேருந்து வந்தால் வசதியாக இருக்கும். மாலை நான்கு  மணிக்குப் பள்ளி விடுகிறது. ஆனால்  ஐந்தரை மணிக்கு பேருந்து வருவதால்  மாணவ மாணவியர்கள் வீட்டுக்கு செல்ல  ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் பள்ளி விடும்  நேரத்தில் பேருந்தை அனுப்ப நட வடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். சிபிஎம் கவுன்சிலர் என்.செல்வநாயகம் பேசும் போது, 5 ஆண்டுகளாக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், மாவட்ட  ஆட்சியர் விசாகனின் துரித நடவ டிக்கை காரணமாகவே பேருந்து விடப் பட்டுள்ளது. அவரக்கு கிராம மக்கள் சார்பாகவும் ஊர் மக்கள் சார்பாகவும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாகவும் நன்றி யை தெரிவித்துக்கொள்வதாக கூறி னார்.                     (ந.நி.)