districts

img

அரசு மருத்துவமனையில்  தேசிய தர மதிப்பீட்டு குழுஆய்வு

திண்டிவனம்,செப்.22- திண்டிவனம் அரசு மருத்துவமனையில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர். விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் அரசு மருத்துவ மனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவர் மனிஷ் பிரியதர்ஷி, சுரேந்திரநாத் ஆன்ட்டி, பெடி சிட்டி கிரேந்தி ஆகியோரை கொண்ட ஒன்றிய அரசின் தேசிய தர மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட விருக்கும்  புதிய கட்டிட பணிகள், தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் இதர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.  மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தகுமாரி, மருத்துவர்கள் வளவன், முரளி ஸ்ரீ, சீனிவாசன், சுரேஷ்குமார், ராஜசேகர், இளங்கோ மற்றும் செவிலியர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த ஆய்வு இன்னும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

;